பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்117

தவறுதலில்லாதவார்த்தை.  இரண்டாமடியில் வகரத்துக்கு யகரம்,
இனவெதுகை.  விழிசிவவாவுளமழலாஎன்றுபிரதிபேதம்.          (161)

162.இந்தத்தனியிரவின்கணின் னிருதோடழுவுறவே
வந்துற்றவெனைத்தாயர்தம்வகையிற்புகல்செய்யா
நிந்தித்தனைநீசெய்தவநெறியின்பயனெல்லாம்
வெந்துற்றருநீறாயெழவிடுவேனெனவெகுளா.

மூன்றுகவிகள்-ஒருதொடர்.

     (இ - ள்.)இந்த தனி இரவின்கண் - ஏகாந்தமான இவ்விராத்
திரிகாலத்தில், நின் இரு தோள் தழுவுறஏ-உனது இரண்டு தோள்களையும்
ஆலிங்கனஞ்செய்யும் பொருட்டாகவே, வந்து உற்ற-வந்து சேர்ந்த, எனை-
என்னை,தாயர்தம் வகையில் புகல் செய்யா - தாய்மார்முறையிலேவைத்துச்
சொல்லி, நிந்தித்தனை-இகழ்ந்தாய்;நீ செய் தவம் நெறியின் பயன் எல்லாம்
- நீ செய்த தவமார்க்கத்தின் பயன் முழுவதும், வெந்துற்று அரு நீறு ஆய்
எழ - வெந்துபோய் எடுத்தற்கரிய சாம்பலாய் விடும்படி, விடுவேன் -
சாபமிட்டு விடுவேன், என - என்று(ஊர்வசி)சொல்லி, வெகுளா -
கோபித்து,-(எ - று.)-'என'என்று 164-ஆங் கவியில் தொடரும்.

     மனைவியாகத்தன்னையங்கீகரியாமல்தாயாகவைத்துத் துதித்துக்கூறி
மரியாதை செய்ததையே, தன் கருத்துக்கு மாறாகஇருத்தல்பற்றி,
நிந்தித்ததாகக் கூறினாள். இந்த இரவின்கண் தனியே வந்துற்ற எனை
என்றும் இயைக்கலாம்.  இடுவேன் என்றும் பதம் பிரிக்கலாம், (162)

163.நின்போலமர்புரிவாரிரு நிலமன்னரினுண்டோ
அன்போடழல்வருபாவையை யடைவுன்னியளித்தாய்
பொன்போலிரவிடையாடவர் புகலாமொழிபுகல்வாய்
வன்போவருணலமோபெருமிதமோவளர்புகழோ.

     (இ - ள்.) நின் போல் - உன்னைப்போல, அமர் புரிவார்-போரைச்
செய்யும் வீரர், இரு நிலம் மன்னரின்-பெரிய பூலோகத்திலுள்ள
அரசர்களில், உண்டுஓ-வேறு உளரோ? [இல்லை];(அன்றி யும் நீ), அழல்
வரு பாவையை-அக்கினியிற்பிறந்த பதுமை போலழகிய திரௌபதியை,
அன்போடு-அன்புடனே, அடைவு உன்னி அளித்தாய்-
மனையாளாகும்முறைமையையெண்ணிக்கூடியருளினாய்;பொன் போல்
இரவிடை-(காமிகளுக்குப்) பொன்போலருமையான இவ்விராத்திரியிலே,
ஆடவர் புகலாமொழி புகல்வாய்-ஆண்தன்மையுடையவர்
சொல்லத்தகாதசொல்லைச்சொல்கிறாய்;(நீ இங்ஙனஞ் சொல்வது), வன்புஓ-
வலிமையோ? அருள் நலம்ஓ கருணையினதுநன்மையோ? பெருமிதம்ஓ-
வீரமோ? வளர் புகழ்ஓ-எங்கும் வளர்கிற கீர்த்தியோ? [இவற்றுள்
ஒன்றையுந் தருவதாகாதென்றபடி];(எ - று.)

     அன்றுதிரௌபதிக்கு உனது இன்பத்தை யருளியது போலவே இன்று
எனக்கும் அருளலாகாதோஎன்னுங் கருத்தால்