பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்123

மின்னினுண்ணிடை யாளும்வெருவுறா   
மன்னவன்பதம் வந்துவணங்கினாள்.

     (இ-ள்.)  சுரஈசன் - தேவேந்திரன், சுரரோடுஉம்-தேவர்களுடனே,
போய் - சென்று, அன்னம் மெல் நடை ஆய்இழை தன் உழை -
அன்னப்பறவையின் நடைபோன்ற மென்மையான நடையையும் ஆராய்ந்து
செய்யப்பட்ட ஆபரணங்களையுமுடையஊர்வசியினிடத்து, துன்னினன் -
சேர்ந்தான்;(அப்பொழுது), மின்னின் நுண் இடையாள்உம் -
மின்னலைக்காட்டிலும்நுட்பமான இடையையுடைய ஊர்வசியும், வெருவுறா-
அச்சமடைந்து, வந்து-(எதிரில்) வந்து, மன்னவன் பதம் வணங்கினாள்-
இந்திரனது பாதங்களைநமஸ்கரித்தாள்;(எ-று.)

    அன்னம்=ஹம்ஸம்:வடமொழித் திரிபு.  மென்னடை - மந்தகதி:
கண்ணுக்கு இனிய நடையுமாம்.  ஆயிழை - வினைத்தொகையன்மொழி.
இழை சினையாகுபெயராய்,ஆடையுமாம்.                  (172)

173.-மூன்றுகவிகள் -இந்திரனுடன் சென்ற தேவர்கள்
உருப்பசியைத்துதித்து 'நீஅருச்சுனனுக்கு இட்ட
சாபத்தை அவன்வேண்டும்போது பெறுமாறுஅருள்புரிக'
என்று வேண்டுதலைக்கூறும்.

வணங்குமுன்ன மடநடையோதிமக்
கணங்கொலென்னக் கவின்பெறுகோதையைச்
சுணங்கறாமுலைத்தோகையைவார்குழல்
அணங்கையண்ட ரனைவரும்போற்றியே.

நான்குகவிகள் - ஒருதொடர்.

     (இ - ள்.)வணங்கும் முன்னம் - (இந்திரனை)நமஸ்கரித்தற்கு முன்பே
[மிகவிரைவில் என்றபடி],மடம் நடை ஓதிமம் கணம் கொல் என்ன கவின்
பெறு கோதையை - அழகிய நடையில் அன்னத்தின் இனமோ என்று
சொல்லும்படி அழகைப்பெற்ற பூமாலைபோன்றவளும், சுணங்கு அறா
முலைதோகையை - தேமல்நீங்காத தனங்களையுடையமயில்போன்றவளும்,
வார் குழல் அணங்கை - நீண்ட கூந்தலையுடையதெய்வப் பெண்ணுமாகிய
அவ்வூர்வசியை,-அண்டர் அனைவர்உம்- தேவர்கள் எல்லாரும், போற்றி -
துதித்து,-(எ - று.)-'கூறி'என மேலே தொடரும்.

     மடநடை -இளமையாகிய நடை:மந்தகதியென்னவுமாம்.  கணம் -
வடசொல்.  கொல் - வினா. கோதை, தோகை - உவமவாகுபெயர்கள்.
மாலை- மென்மை யழகுகளுக்கும், மயில் சாயற்கும் உவமை.  கோதை -
மாலையையுடையாளெனச் சினையாகுபெயருமாம்.  சுணங்கு -
பருவமகளிர்க்குக் கொங்கைகளிற் சிறியவும் பெரியவுமாகப் பொற்கொடியைப்
பரப்பினாற்போலத்தோன்றுகின்ற சிலவடுக்கள்.                 (173)