பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்141

ளும் ஆகாததால், இது- வேற்றுப்பொருள்வைப்பணி யன்று.  வாகுபூதரம்
என்ற தொடரை-தோள்களாகிய மலைகள்என உருவகமாக்கி
உரைத்தற்கு இங்கே இயைபின்று.  (மேலுங்கீழும் வளர்ந்துநின்று) பூமியைத்
தாங்குவதுபற்றி, பூதரம் என்று மலைக்குக்காரணப்பெயர்.  'உருவொன்றும்
மதன்'என்றது - பரமசிவனது நெற்றிக்கண்ணின் நெருப்பினால்உடம்பு
எரிக்கப்பட்டு அழிந்து அனங்கனாதற்குமுன்னேஅங்கத்தோடு கூடியுள்ள
மன்மதனை;பின்பு அங்கத்தோடுகூடிவந்த மன்மத னென்றால்,இல்
பொருளுவமை;இனி உருஒன்றுஉம் மதனைஒப்பான் என்பதற்கு -
ரூபமொன்று மாத்திரத்தால் மன்மதனையொப்பவன் என்று உரைத்து,
வில்லின்தொழிலில் அவனினும் மிக்கவனெனக் கருத்துக்கொள்ளுதலும்
அமையும்.  மதன்=மதநன் அல்லது மந்மதன்.  ஒருப்படுதல் - உடன்படுதல்.
வண்மையாவது - ஏற்றார்க்குமாற்றாதுவரையறையின்றிக் கொடுத்தல்.

     ஒருகாலத்தில்திருக்கைலாயத்திற் பரமசிவனார்சனகர் முதலிய
நால்வர்க்கு யோகநிலைமையைஉணர்த்துதலின் நிமித்தம் தாம்
யோகஞ்செய்துகொண்டிருந்தார்.  அப்போது பிரமனேவலால் மன்மதன்
மலரம்புகளைஎய்து அக்கடவுளின் தவத்தைக் கெடுக்கலுற்றான்.
அக்கடவுள் சினந்து நெற்றிக்கண்ணைவிழிக்க, அந்த மன்மதன் அதன்
நெருப்புக்கு இரையாய் உடம்பு எரிந்து சாம்பரானானென்பதும்: உடனே
மன்மதன் மனைவியாகியரதீதேவி தன் கணவன் எரிக்கப்பட்டதனால்
மிகவருந்திச் சிவபிரானைஅடைந்து பிரார்த்திக்க, அவர்
அவளுக்குமாத்திரம் ரூபமுடையவனாகவும்மற்றையோர்க்கு
ரூபமில்லாதவனாகவும்இருக்கும்படி அருள்செய்தனரென்பதும் புராண
கதைகள்.                                              (193)

18.-இதுவும்,மேற்கவியும் - குளகம்:அருச்சுனனுக்குப்
போர்க்குவேண்டுவன தந்து இந்திரன்
விடைகொடுத்துப் பொருதற்கு அனுப்புதலைக்கூறும்.

காற்றெனக்கடியவேகக் கனலெனக்கொடியவென்றும்
மேற்றிசையெல்லையெல்லாம்வீதிபோயொல்லைமீள்வ
கூற்றமுமுகிலுமுட்கக் குமுறும்வெங்குரலுமென்மேற்
சீற்றமுந்திறலுமிக்க தீக்கதிசெலாததூய.

     (இ-ள்.)காற்று என கடிய - காற்றுப்போல வேகமுள்ளவையும், வேகம்
கனல் என கொடிய - உக்கிரமாக அக்கினிபோல(ப் பகைவர்களை
யழிக்குங்) கொடுந்தன்மையுள்ளவையும், என்றுஉம் - எப்பொழுதும், மேல்
திசை எல்லைஎல்லாம் - ஆகாயமாகிய திக்கின் இடம்முழுவதிலும்,
வீதிபோய் - ஒழுங்காகச்சென்று, ஒல்லை-விரைவில்,மீள்வ -
திரும்புவனவும், கூற்றம்உம் முகில்உம் உட்ககுமுறும் வெம் குரல்உம் -
(யாவர்க்கும் பயங்கரனான)யமனும் (இடியிடிக்கின்ற) மேகமும் அஞ்சும்படி
கனைக்கின்றகொடிய கண்டத் தொனியிலும், மெல்மேல் சீற்றம்உம்-
மேலேமேலே அதிகப்படுகின்ற கோபத்திலும், திறல்உம் - பலத்திலும், மிக்க-
மிகுந்துள்ள