பக்கம் எண் :

142பாரதம்ஆரணிய பருவம்

வையும், தீ கதிசெலாத - கெட்டநடை நடவாதனவும், தூய-
தூய்மையுள்ளவையுமாகிய,-(எ-று.)-'பரி'என மேலைக்கவியோடுஇயையும்.

     கடிய, கொடிய,தூய என்னும் பலவின்பால் வினையாலணையும்பெயர்கள்,
'பரி' என்னும் பால்பகா அஃறிணைப்பெயருக்குவிசேஷணமாம். வென்று எனப்
பிரித்து - (போமிடங்களிலெல்லாம்) வெற்றிகொண்டு எனவுமாம். பத்துத்
திக்குக்களுள் ஒன்றாதலால், வானத்தை 'மேற்றிசை'என்றார். மேற்றிசை
எல்லை எல்லாம் வீதி போய் - (இந்திரன் திக்காகிய கிழக்கிலிருந்து)
மேற்குத்திக்கினிடம் முழுவதிலும் ஆகாயவீதியிலே நேராக ஓடி என்றும்
உரைக்கலாம். ஒல்லை- விரைவுப்பொருள் குறிப்பதோர் இடைச்சொல்;
வல்லை,வல்லே என்பனவும் இவ்வாறே.  கூற்றம், அம்-சாரியை.  கூற்று -
(பிராணிகளின் உடம்பையும் உயிரையும் வேறுபிரித்துக்) கூறுபடுத்துங்
கடவுள்.  'தேவர்களைஇருதிணைகளாலுங்கூறலாம்'ஆதலின், 'கூற்றம்'
என்றான். உத்தம அச்சுவலக்ஷணம் முழுவதும் அமைந்தன வென்பார்,
'தூய'என்றார்.                                        (194)
      

19. ஆயிரம்பத்துவெம்போ ரடற்பரிபூண்டதேரும்
மாயிருங்கலையின்மிக்கமாதலிதனையுநல்கிக்
காயிருங்கிரணச்செம்பொற் கவசமுங்கொடுத்துப்பின்னர்
வேயிருந்தெரியலாற்குச் சுரபதிவிடையுமீந்தான்.

     (இ-ள்.) வெம்போர் - கொடுமையான யுத்தத்திற்குஉரிய, அடல் -
வலிமையையுடைய, ஆயிரம் பத்து பரி - பதினாயிரம்குதிரைகளை,பூண்ட,
- பூட்டியுள்ள, தேர்உம் - (தனது) இரதத்தையும் மா இரு கலையில்மிக்க -
மிகவும் பெரிய குதிரை நூலுணர்ச்சியிற் சிறந்த, மாதலிதனைஉம்- மாதலி
என்னும் (தனது) தேர்ப்பாகனையும்நல்கி - கொடுத்து,-காய்இரு கிரணம் -
சுவலிக்கின்ற மிக்க ஒளியினையுடைய,செம் பொன் கவசம்உம் - சிவந்த
பொன்னினாலாகியதொருகவசத்தையும், கொடுத்து-,பின்னர் - பின்பு,
சுரபதி - தேவேந்திரன், வேய் இரு தெரியலாற்கு - அணிந்த பெரிய
(கற்பகப் பூ) மாலையையுடையஅருச்சுனனுக்கு, விடைஉம் ஈந்தான்-
(போருக்குச் செல்லுதற்கு) உத்தரவையுங் கொடுத்தான்;

     போர்க்குச்செல்ல, தேவேந்திரன், அருச்சுனனுக்குத் தேர் முதலியன
கொடுத்து விடையுங் கொடுத்தானென்க. "விவ்விரவாதவாசத் தாமமும்
விழைந்து சூட்டி"என்று கீழ்க்கூறியதற்கு ஏற்ப, 'வேயிருந்தெரியலான்'
என்றார்;அன்றியும் போருக்கு உரிய தும்பைப்பூமாலையைஇப்பொழுது
அணிந்துள்ளவ னென்றுமாம்.  தெரியல் - விளங்குவது: மாலை. கலை-
குதிரையோட்டுங்கல்வி.  கிரணரத்நகவசம் என்றும் பாடம்.       (195)

20.-விடைபெற்றஅருச்சுனன் போர்க்கோலம் புனைதல்.    

விடையெனத்தொழுதுபோந்து வெஞ்சிலைவினோதவீரன்
சுடுசரத்தூணிகொற்றப் புயத்தினிற்றுதையத்தூக்கி