பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்143

இடுமணிக்கவசமெய்யிலெழிலுறப்புனைந்துதன்னைத்
திடமுடைச்சிங்கமன்னான்செருத்தொழிற்கோலஞ்செய்தான்.

     (இ-ள்.)திடம் உடை சிங்கம் அன்னான்-வலிமையையுடையஆண்
சிங்கத்தை யொத்தவனாகிய,வெம் சிலைவினோதம்வீரன் - கொடிய
வில்லின் தொழிலையேபொழுதுபோக்காகவுடைய வீரனாகியஅருச்சுனன்,
விடை என-(உனக்கு) நியமனம் என்று (இந்திரன் சொல்லி) விடுப்ப,
தொழுது-அஞ்சலிசெய்து, போந்து-புறப்பட்டு [சபையைவிட்டுவெளிவந்து],
சுடு சரம்தூணி-(பகைவர்களை)அழிக்கின்ற அம்புகளையுடைய
தூணீரங்களை,கொற்றம் புயத்தினில்-வெற்றியையுடைய தோள்களிலே,
துதைய தூக்கி-அழுந்தக் கட்டி,-இடுமணி கவசம்-பதித்துள்ள
இரத்தினங்களையுடையகவசத்தை, மெய்யில்-உடம்பிலே, எழில்உற-
அழகுமிக, புனைந்து-தரித்து,-(இவ்வாறு),தன்னை-,செருதொழில் கோலம்
செய்தான்-போர்த்தொழிலுக்கு உரிய அலங்காரத்தைச் செய்து கொண்டான்;
(எ-று.)

     அருச்சுனன்சவ்வியசாசி யாதலால், 'தூணீரங்களைத்தோள்களிற்கட்டி',
என்றது.  சுடு சரம் - நெருப்பில்வைத்துக் காய்ச்சி வடித்துக் கூர்செய்த
அம்பு என்றுமாம்.  தூணி - பாணப்புட்டில்.  தூக்கி - தொங்கவிட்டு.
சிங்கம் நடை வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களால் உவமை.(196)

21.-அருச்சுனன்நிவாதகவசரைக்குறித்துவினவ, மாதலி
அவர்களியல்பைக்கூறலுறுதல்.

மோதுபோர்தனக்குவேண்டு முரட்படைபலவுங்கொள்ளாக்
கோதைவிற்றடக்கைவீரன் கொடிமணித்தெர்மேற்கொண்டு
மாதலிப்பெயராயந்த வஞ்சரெத்திசையரென்றான்
சூதனுமவனுக்கன்னோரியல்பெலாந்தோன்றச்சொல்வான்.

     (இ-ள்.)கோதை - நாணியையுடைய, வில் - காண்டீவத்தையேந்திய,
தட - பெரிய, கை - கையையுடைய, வீரன்-அருச்சுனன், மோது
போர்தனக்கு வேண்டும் - (பகைவர்களைத்)தாக்குகின்ற யுத்தத்திற்கு
அவசியமான, முரண் படை பலஉம் - வலிமையையுடைய ஆயுதங்கள்
பலவற்றையும், கொள்ளா-எடுத்துக்கொண்டு,-கொடிமணி தேர் மேல்
கொண்டு-துவசத்தையும் மணிகளையுமுடைய(அவ்விந்திரனது)
தேரின்மேலேறிக்கொண்டு, (சாரதியை நோக்கி), 'மாதலிபெயராய் -
மாதலியென்னும் பேருள்ளவனே!  அந்த வஞ்சர் - வஞ்சனையையுடைய
அந்த நிவாதகவசர்கள், எ திசையர்-எந்தத்திக்கிலே யுள்ளவர்கள்?'
என்றான்-என்றுவினாவினான்: சூதன்உம் - அத்தேர்ப்பாகனும், அவனுக்கு
- அவ்வருச்சுனனுக்கு, அன்னோர்இயல்பு எலாம் - அவ்வசுரர்களுடைய
(இருப்பிடம் முதலிய) தன்மைகளையெல்லாம்,தோன்ற - விளங்க,
சொல்வான் - சொல்வானானான்,  (எ - று.)-அதுமேற்கவியிற் காண்க.