பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்145

தோண்டிய அப்பள்ளமேநீரால்நிறைந்து கடலாகிச் சாகரமெனப் பெயர்
பெற்றதென்றுங் கூறப்படுங் கதையையுட்கொண்டு, 'தொடுகடல்'
எனப்பட்டது.  சித்திரசேனன் - அருச்சுனனுக்குத் தேவலோகத்திலே
சங்கீதவித்தை பயிற்றுவித்த ஆசிரியன்.                       (198)

23.-'தேவர்களால்வெல்லமுடியாத அசுரரை ஒருநரன்
வெல்லவல்லனோ?'என்று வானவமகளிர் சிரித்தல்.

மொய்திறற்கடவுளோர்முப் பத்துமுக்கோடியாலும்
செய்தமர்தொலைக்கவொண்ணாத்தெயித்தியர்சேனைதன்னை
எய்தொருமனிதன்வெல்வ தேழைமைத்தென்றுநக்கார்
மைதவழ்கருங்கட்செவ்வாய் வானவமகளிரெல்லாம்.

     (இ-ள்.)'மொய்திறல் - மிகுந்த வலிமையையுடைய, கடவுளோர்
முப்பத்துமுக்கோடியால்உம்-முப்பத்துமுக்கோடி தேவர்களாலும், அமர்செய்து
தொலைக்கஒண்ணா-போர்செய்துஅழிக்க முடியாத, தெயித்தியர் சேனை
தன்னை-அசுரர்களுடையசேனையை,ஒரு மனிதன் - (சேனாபலமில்லாமல்
தனியனான)மனிதனொருவன்,எய்து - அம்பெய்து, வெல்வது-சயிக்க
முயல்வது, ஏழைமைத்து-அறிவில்லாமையையுடையது,'என்று - என்று
சொல்லி, மைதவழ் கரு கண் - மைபொருந்திய (இயற்கையிற்) கருமையான
கண்களையும்,செவ் வாய் - சிவந்த வாயையுமுடைய, வானவ(ர்) மகளிர்
எல்லாம்-தேவமாதர்களெல்லாரும், நக்கார்-சிரித்தார்கள்;(எ-று.)

     முப்பத்துமுக்கோடி - மூன்றாகியபத்தும், அதனோடுகூடிய
மூன்றுமாகிய கோடியென்க.  முப்பத்து முக்கோடியாவார்-ஆதித்தியர்
பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும்,வசுக்கள் எண்மரும்,
அசுவினீதேவர் இருவரும் ஆகிய முப்பத்துமூவரையுந் தலைவராகக்
கொண்டு அத்தனைகோடியாக உள்ளவர்கள்.  தெயித்தியர் - தைத்யர்
என்பதன் விகாரம்: (காசியபமுனிவரது மனைவிமார்களுள்)திதி என்பவளது
மக்களென்று பொருள்.  ஏழைமைத்து - ஒன்றன்பாற் குறிப்புமுற்று.  மை -
அஞ்சனம்.  கருங்கட் செவ்வாய் - முரண்டொடை.                (199)

24.-கோபுரவாயிலில்அருச்சுனன் வருகையில்
தேவேந்திரனென்றுதேவர்கள் திரளுதல்.

மங்கையர்வாய்மைகேட்டு மணிக்குறுமுறுவல்செய்து
கங்கையம்பழனநாடன் கடிமதில்வாயில்செல்ல
அங்கவன்றன்னைக்கண்டவணிகழலமரரெல்லாம்
மங்குல்வாகனனென்றெண்ணிக் கதுமெனவந்துதொக்கார்.

     (இ-ள்.)கங்கை அம் பழனம் நாடன் - கங்காநதியின் நீர் பாய்கின்ற
கழனிகளையுடையகுருநாட்டையுடையவனாகியஅருச்சுனன்,-மங்கையர்
வாய்மை கேட்டு-(அவ்வாறு சொல்லிச் சிரித்த) தேவஸ்திரீகளின்
வார்த்தையைச் செவியுற்று, மணி குறு முறுவல்செய்து - அழகிய
புன்சிரிப்பைச் செய்து, கடி மதில் வாயில்