பக்கம் எண் :

150பாரதம்ஆரணிய பருவம்

பட்டது.  தடந்தேர்- உரிச்சொற்புணர்ச்சி.  தபனன்-தபிப்பவன்;தபித்தல் -
சுடுதல்.  வான் - பெருமை யுணர்த்தும்பொழுது உரிச்சொல்;இனி,
பெயர்ச்சொல்லாய், வானத்தையளாவுங் குன்றென்றுமாம்.           (205)

வேறு.

30.

திரைகொ ழித்திடுஞ் சிந்துவின் சூழலில்
குரக தத்தடந்தேர்போய்க் குறுகலும்
மரக தக்கொண்டன்மாதலிக் கன்பினால்
விரகு றச்சிலமாற்றம் விளம்பினான்.

     (இ-ள்.)குரகதம் தட தேர் - குதிரைகளைப்பூட்டியுள்ள பெரிய
அவ்விரதமானது, திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்-அலைகளை(க்
கரையில்) மோதுகின்ற கடலையடுத்த இடத்திலே, போய் குறுகலும்-போய்ச்
சேர்ந்தவளவில்,-மரகதம் கொண்டல் - பச்சையிரத்தினமும் காளமேகமும்
போன்ற அருச்சுனன், மாதலிக்கு - தேர்ப்பாகனைநோக்கி, அன்பினால்-
அன்புடனே, விரகு உற - அறியும்படி, சில மாற்றம் விளம்பினான்- சில
வார்த்தைகளைக்கூறினான்;(எ-று.)-அது மேற்கவியிற் கூறுகிறார்;

     சூழல் -சூழ்ந்துள்ள இடம்.  குரகதம் - குளம்புகளால் நடப்பது
என்று பொருள்;ஒற்றைக்குளம்புள்ளது என்று கருத்து.  மரகதக்கொண்டல்
என்ற தொடர்மொழி - உவமையாகுபெயராய் அருச்சுனனுக்கு வந்தது.
அன்பினால்- மூன்றாமுருபு,அடைமொழிப் பொருளிலே வந்தது;
அன்புடையவனாய்என்று கருத்து.

     இதுமுதல்இருபத்தேழு கவிகள் - பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும்,
ஈற்றுச்சீர் விளச்சீரும், மற்றிரண்டும் மாச்சீரும் விளச்சீரும் விரவியும் வந்த
அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.

31.-தோயமாபுரத்துஅவுணரியல்பைக் கூறுமாறு
அருச்சுனன் வினவ,மாதலி கூறலுறல்.

இப்புரத்தி லவுண ரியல்பெலாம்
செப்பெனக்குத் தெரிதர வென்றலும்
அப்புரத்தவ ராண்மையுந் தோற்றமும்
செப்பலுற்றனன் திண்டிறற் றேர்வலான்.

     (இ-ள்.)'இபுரத்தில் அவுணர் இயல்பு எலாம் - இந்த நகரத்திலுள்ள
அசுரர்களது தன்மை முழுவதையும், எனக்கு-,தெரிதர-விளங்கும்படி,
செப்பு-சொல்வாயாக',என்றலும்-என்று (அருச்சுனன்) சொன்ன வளவில்,-
அ புரத்துஅவர் ஆண்மைஉம்-அந்நகரத்திலுள்ள அவ்வசுரர்களது
பராக்கிரமத்தையும், தோற்றம்உம்-காட்சியையும், திண் திறல் தேர்வலான் -
மிகுந்த வலிமையையுடைய தேர்செலுத்துந் தொழிலில் வல்லவனாகிய
மாதலி, செப்பல் உற்றனன்-சொல்லத்தொடங்கினான்;(எ-று.)-அது
மேலெட்டுக்கவிகளாற் கூறுகின்றார்.