தோற்றம் - தோன்றற்பாடு: தொழிற்பெயர்; வலிமையுமாம். திண்திறல் - ஒருபொருட்பன்மொழி. (207) 32.-எட்டுக்கவிகள்-தோயமாபுரத்தசுரரியல்பை மாதலிகூறுவன. தெழித்தசொல்லினர் சீற்றவெந்தீயுக விழித்தகண்ணினர் விண்முகிலைக்கவின் அழித்தமேனிய ராழ்வெம்பிலத்தையும் பழித்தகன்ற பெரும்பகுவாயினார். |
பத்துக்கவிகள் - ஒருதொடர். (இ-ள்.) (அவ்வசுரர்கள்),-தெழித்தசொல்லினர் - அதட்டிக் கூறுகின்ற சொற்களையுடையவர்;சீற்றம் வெம் தீ உக விழித்த கண்ணினர்-கோபத்தாற் கொடிய நெருப்புச்சிந்த விழிக்கின்ற கண்களையுடையவர்;விண் முகிலை கவின் அழித்த மேனியர்-(தமது கருநிறத்தால்) ஆகாயத்திற்செல்கின்ற காளமேகத்தை நிறங்கெடச்செய்த உடம்பை யுடையவர்;ஆழ் வெம்பிலத்தைஉம் பழித்து அகன்ற பெரு பகு வாயினார்-ஆழ்ந்து பயங்கரமாகவுள்ள பிலத்துவாரத்தையும் (தமக்கு ஒப்பாகாதென்று) நிந்தித்து (அதனிலும்) பரந்த பெரிய திறந்த வாயையுடையவர்;(எ-று.) தெழித்தல் - பேரொலிசெய்தலுமாம். விண்முகிலைக்கவின் அழித்த மேனியர் என்பதற்கு - நீர்கொண்டமேகத்தினுங் கரிய உடம்புள்ளவர் என்று கருத்து. சொல்லினர் முதலிய பயனிலைகளுக்கெல்லாம்'அவ்வசுரர்கள்' எனத் தோன்றாஎழுவாய்வருவிக்க;அன்றி இவற்றை, மேல்38-ஆம் கவியிலுள்ள 'மூன்றுகோடியசுரர்'என்பதற்கு விசேஷணமாகக் கொள்ளினும் அமையும். பிலம் - பாதாளவழி. பகுவாய் - பேழ்வாய் (208) 33. | மண்ணுநீரும் அனலுமருத்துடன் விண்ணும்வேண்டின்விரைவின்முருக்குவார் எண்ணெயூட்டிவிருட்குழம்பாலெழில் பண்ணியாக்கைவகுத்தன்னபான்மையார். |
(இ-ள்.)மண்உம் - பிருதிவியும், நீர்உம்-அப்புவும், அனல்உம்- அக்கினியும், மருத்துடன்-வாயுவும், விண்உம் - ஆகாசமும், (ஆகிய பஞ்சமகாபூதங்களையும்),வேண்டின்-(அழிக்க), விரும்பினால்,விரைவின்- சீக்கிரத்தில், முருக்குவார் - அழிக்கவல்லவர்: இருள் குழம்பால்-இருளாகிய குழைசேற்றினால்,எழில் பண்ணி - வளர்ச்சி பெறச் செய்து, எண்ணெய் ஊட்டி-(மேலே) எண்ணெயைத் தடவி, வகுத்து அன்ன-அமைத்தாற் போன்ற, யாக்கை பான்மையார்-உடம்பின் தன்மையையுடையவர்;(எ-று.) லயகாலத்தில்நிலம் நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்புக் காற்றிலும், காற்று விசும்பிலும் ஒடுங்கு மென்பது நூல்வழக்காத |