லால், 'மண்ணுநீருமனலு மருத்துடன் விண்ணும்' என வைத்தார். மேனியினது கருமையும் வழுவழுப்பும் மினுமினுப்பும்பற்றி, 'எண்ணெயூட்டியிருட்குழம்பாலெழில் பண்ணியாக்கை வகுத்தன்னபான்மையார்' என்றது: தற்குறிப்பேற்றம். எழிலாவது - வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டுதல். (209) 34. | மற்புயாசலத் தின்வலியாலிகல் சற்பராசன் றலைச்சுமைமாற்றுவார் அற்பவாழ்வுடையம்போருகத்தர்தம் கற்பகோடிகடையுறக்காண்குவார். |
(இ-ள்.) மல்- மற்போரிற்பயின்ற, புய அசலத்தின் - மலைபோலும் (தமது) தோள்களின், வலியால்-பலத்தினால்,இகல் சற்பராசன் தலைசுமை மாற்றுவார்-(கீழிருந்து பூமியைத் தாங்குகின்ற) வலிமையையுடைய பாம்புகளுக்கு அரசனாகியஆதிசேஷனது தலையின்பாரத்தைத் (தாம் பூமியைத் தாங்கித்) தவிர்க்க வல்லவர்: அற்பம் வாழ்வு உடை அம்போருகத்தர்தம் - மிகச் சிறிய வாழ்நாளையுடையபிரமர்கள் பலரது, கற்பம் கோடி-ஆயுள்நாள் பலவற்றை, கடை உற-முடிவுபோக, காண்குவார் - பார்க்குந் தன்மையுள்ளவர்;(எ-று.) மல்தொழிலாவது- ஆயுதமின்றிக்கே கை கால் முதலிய உறுப்புக்களினாற்போர்செய்தல். புஜ + அசலம்=புஜாசலம்: தீர்க்கசந்தி: அது புயாசலம் எனத் திரிந்தது. அசலம் - சலியாதது. சற்பம் - ஸர்ப்பம்: எதுகை நோக்கிய விகாரம். சுமை-சுமக்கப்படுவது: ஐ - செயப்படுபொருளீறு. மற்றை யெல்லாப் பிராணிகளுடைய வாழ்நாளினும் பெரிதாகிய பிரமனது ஆயுளும் இவ்வசுரர்களது தீர்க்காயுசை நோக்குமிடத்துச் சிறிதாகத் தோன்றுமென்பார், 'அற்பவாழ்வுடை யம்போருகத்தர்'என்றார். வாழ்வு-வாழும் நாளுக்குத் தொழிலாகுபெயர். அம்போருகம்=அம்போருஹம்: தாமரை;நீரில் முளைப்பதுஎன்று பொருள்: இது-காரணங் கருதியபொழுது அல்லி ஆம்பல் குவளைநெய்தல் முதலிய நீர்ப்பூங்கொடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும், காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய்த் தாமரைக்கே செல்லுதலாலும் காரணவிடுகுறிப்பெயர். இக்கொடியின் பெயர், அதன்மலருக்குப் பொருளாகுபெயர்; முதலாகுபெயரெனினும் ஒக்கும்: இதுபோல்வனவற்றை முதலுக்குஞ் சினைக்கும்பொதுவென்பாரு முளர். அம்போருகமலரில் உதித்தவர், அம்போருகத்தர். கற்பம் - பிரமனாயுள்;பெரியதொரு காலவரையறை. கோடி - இங்கே, மிகப்பலவாகிய எண்ணிற்கு ஒன்று எடுத்துக் காட்டியவாறு. (210) 35. | பாழியாடக வெற்பிற்படச்சிரங் கீழதாகக்கிளர்மூச்சடக்கிநின்று ஊழிநாளுந்தவ முயன்றோங்குவார் ஆழிநீருமளவிடுந்தாளினார். |
|