பக்கம் எண் :

154பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) கூரும்நல் உரை கூறின்உம் - மிக்க நல்ல வார்த்தைகளைச்
சொல்வதானாலும்,கூற்றுடன் கார்தொறுஉம் இடி சேர்ந்து அன்ன
காட்சியார் - யமனும் மேகந்தோறுந் தோன்றுகின்ற இடியுஞ்
சேர்ந்தாலொத்த தோற்றமுடையவர்: தேர்தொறுஉம் செரு செய்யும் அ
தேவரை- (தத்தமது) இரதங்களிலே (ஏறி வந்து) போர்செய்கின்ற அந்தத்
தேவர்களை,போர்தொறுஉம் - ஒவ்வொரு யுத்தத்திலும், புறம் கண்டு
அன்றி - முதுகுகாட்டியோடச் செய்தல்லாமல், போகலார் - (போர்க்
களத்தினின்று மீண்டு) போகாதவர்;(எ-று.)

     நல்லசொற்சொல்லும்பொழுதும் கண்டத்தொனியால் யமனும்
இடியுஞ்சேர்ந்த தொப்ப ரெனவே, தீயசொற் சொல்லும் பொழுது
உள்ளதன்மை சொல்லவேண்டாதாயிற்று.  அத்தேவர் என்றதில் அகரச்சுட்டு
- அமிருதமுண்டதனால்அழியாவலிபெற்ற தேவர்களது சிறப்பை
யுணர்த்திற்று:இனி, அழகிய தேவ ரெனினுமாம். பெரும்பாணுற்றுப்படையில்
"அவ்வாய்வளர்பிறை"என்பதற்கு - 'அழகியஇடத்தையுடைய வளரும்
பிறை'என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர்உரையெழுதிப்போந்ததனால்
அம் என்பதற்குப்போல,  அ என்பதற்கும் அழகிய என்னும்பொருள்
உண்டென்று உணர்க.                                      (213)

38.மூன்றுகோடி யசுரர்முகிலெனத்
தோன்றுமேனியர் தோமறுமாற்றலர்
ஏன்றுபோர்பொரி னெவ்வெவ்வுலகையும்
கீன்றுசேரக்கிழிக்குமெயிற்றினார்.

     (இ-ள்.) மூன்றுகோடி அசுரர் - மூன்றுகோடி என்னுந் தொகையுள்ள
அவ்வசுரர்கள், முகில் என தோன்றும் மேனியர் - மேகம்போல(ப்
பெரிதாக)த் தோன்றுகின்ற உடம்பையுடையவர்;தோம் அறும் ஆற்றலர் -
குற்றமில்லாத வலிமையுடையவர்;ஏன்று போர்பொரின்-எதிர்த்துப் போர்
செய்தால், எ எ உலகைஉம் - எந்த எந்த உலகங்களையும்,கீன்று - கீறி.
சேர - ஒருசேர, கிழிக்கும் - கிழிக்கவல்ல, எயிற்றினார்-பற்களையுடையவர்;
(எ-று.)

     இங்கே,'முகிலெனத்தோன்றுமேனியர்'என்பது, கீழ் 32 - ஆம்
கவியில் 'விண்முகிலைக்கவினழித்தமேனியர்'என்பதனோடுகூறியது
கூறலென்னுங் குற்றமாகாமைப்பொருட்டு, அங்கே கருமைக்கும், இங்கே
பெருந் தோற்றத்துக்கும் உவமைகூறியதென வேறுபாடுகொள்க.
தோம்=தோஷம்.  ஆற்றல் - ஆற்று என்னும் பகுதியின் தொழிற்பெயர்.
ஏன்று, கீன்று-ஏல்,கீல்-பகுதிகள்.  ஏன்று என்பது, ஏற்றுஎனவும் வரும்.
கீலுதல்-கிண்டுதல், பிளத்தல்.  ஆற்றலுக்குக் குற்றமாவது, தோல்வி.    (214)

39.செப்புரத்தினிற் செஞ்சடைவானவன்
முப்புரத்தை முனிந்தவந்நாளினுந்