மாயையினாற்செய்யும் வஞ்சனையையுடையஅவ்வசுரர்கள், மறுக-மனம் வேறுபடும்படி, வெம் புண்ணின்மேல் தீயை ஒப்பன - மிக வருத்துகின்ற விரணத்தின்மேல் வைத்த நெருப்பை ஒப்பனவாகிய, சில் உரை-சில வார்த்தைகளை,சொல்லுவான் - சொல்பவனானான்(எ-று.)-அது மேற்கவியிற் கூறுகின்றார். முன்னேதேர்நாணிகளின் தொனிகளைக்கேட்டுத் தேவராசன் போருக்கு வருகிறானென்றெண்ணிச்சீற்றங்கொண்ட அவ்வசுரர்களுக்கு மனிதனொருவன்போர்க்கு வந்துள்ளானென்று தூதன் சொல்லும் வார்த்தை அவ்வருத்தத்தின்மேல் மிகவருத்தத்தை மூட்டு மாதலால், 'புண்ணின்மேல் தீயையொப்பன'என்றார்:"இயம்பியசொல்மருமத்தி னெறிவேல் பாய்ந்த, புண்ணிலாம் பெரும்புழையிற்கன னுழைந்தாலெனச் செவியிற் புகுதலோடும்" என்றார்கம்பரும். போய, யகரவொற்று-இறந்தகாலவிடைநிலை. மாயம்- ஒருமந்திரசக்தி. (220) 45.-அருச்சுனனோடுபொரவருமாறு அவுணரிடம் தூதன் கூறுதல். ஒருகுலத்தினில் வேந்துமொவ்வாதுயர் குருகுலத்திற் குனிசிலைவீரற்குத் தருகயுத்தந் திறலுடைத்தானவர் வருகமற்றும் வரூதினிதன்னொடும். |
இரண்டு கவிகள் - ஒருதொடர். (இ-ள்.)'ஒருகுலத்தினில் வேந்துஉம் ஒவ்வாது - எந்தக் குலத்திற் பிறந்த எவ்வரசனும் ஒப்பாகாமல், உயர் - சிறந்துள்ள, குரு குலத்தில் குனி சிலைவீரற்கு - குருகுலத்திற்பிறந்த வளைந்தவில்லையுடைய அருச்சுனனுக்கு, திறல் உடை தானவர் - வலிமையுடைய அசுரர்கள், யுத்தம் தருக - போரைக் கொடுப்பாராக;மற்றுஉம் - மேலும், வரூதினி தன்னொடுஉம்வருக - சேனையோடும்வருவார்களாக;'(எ-று.) அசுரர்களே! நீங்கள் உண்மையாகப் போர்செய்யுந் திறமையையுடையீராயின் சேனையோடுவந்து எங்கள் அருச்சுனனோடு போர் செய்து வெல்லுங்கள், பார்ப்போம் என்றான். குரு என்பவன், சந்திரகுலத்திற் பிறந்த பிரசித்திபெற்ற ஓரரசன்: இவனால்,அக்குலம் 'குருகுலம்'என்றும், அந்நாடு 'குருக்ஷேத்திரம்'என்றும், அக்குலத்தவர் 'கௌரவர்'என்றும் பேர்கொண்டமை காண்க. தானவர் - தனுவின் மக்கள், தத்தி தாந் தநாமம்; இது, முன்னிலையிற்படர்க்கைவந்த இடவழுவமைதி; அண்மைவிளியுமாம். (221) 46.-அதுகேட்டஅசுரர் ஏளனஞ்செய்து சொல்லலுறல். என்றுதூதனிசைத்ததுகேட்டலும் நன்றெனக்கை புடைத்துநகைத்திடாக் |
|