பக்கம் எண் :

160பாரதம்ஆரணிய பருவம்

வன்;வசு - செல்வம்.  புகுந்தது - தெளிவுபற்றிய காலவழுவமைதி;[நன்-
பொது - 33.]                                             (223)

48.வரையுளானு மலரினுளானும்வெண்
டிரையுளானுஞ் செகுப்பருமெம்முடன்
தரையுளான்வந்து போர்பொரத்தக்கதோ
உரையுளாரென் றுரையீருணரவே.

     (இ-ள்.) வரைஉளான்உம் - (கைலாச) கிரியிலுள்ள சிவனும், மலரின்
உளான்உம் - தாமரைமலரிலுள்ள பிரமனும், வெள்திரை உளான்உம் -
வெண்மையான பாற்கடலிலுள்ள திருமாலும், (என்னும் திரிமூர்த்திகளும்),
செகுப்பு அரும் - (கூடிவந்து பொருதாலும்) அழித்தற்கு முடியாத, எம்முடன்
- எங்களுடனே, தரை உளான் - பூமியிலுள்ளானொருமனிதன், வந்து போர்
பொர தக்கதுஓ - வந்து போர்செய்யத் தகுமோ?  [தகாதன்றோ];உரை
உளார் என்று - (இங்ஙனம் அலட்சியமாகப் பேசும்) பேச்சுடையார்கள்
என்று, உணர உரையீர் - (உம்வீரனுக்குத்) தெரியச் சொல்வீராக;(எ-று.)

     தூதனாகியசித்திரசேனனொருவனைநோக்கி 'உரையீர்'எனப்
பன்மையாற் கூறியது, இகழ்ச்சிபற்றி:பால்வழுலமைதி;ஒருமைப் பாலிற்
பன்மைப்பால் வந்தது: [நன்- பொது - 28.]உரைஉளார் - பேசுந்திறமுடைய
தூதுவரே! என்று உணர உரையீர் - இவ்வாறு (அருச்சுனனுக்குத்) தெரியும்படி
சொல்லுங்கள் எனவுமாம்.  வரை என்னும் கணுவின் பெயர் -
சினையாகுபெயராய் மூங்கிலைக்குறித்து, அது பின் தானியாகுபெயராய்
மூங்கில்விளையும்மலைக்குவருதலால், இருமடியாகுபெயர்.  அலரின் எனப்
பிரித்தல். மோனைத்தொடைக்குக் பொருந்தாது.  திரை யென்னும்
அலையின்பெயர் - கடலுக்குச் சினையாகுபெயர்.இனி, வெண் திரை -
வெண்மையாகிய அலைகளையுடையதெனஅன்மொழித்தொகையுமாம். பொர -
தொழிற்பெயர்த்தன்மைப்பட்டு எழுவாயாயிற்று.  நம்முடன் என்றும்,
தக்கனோஎன்றும், இன்றுரையீரென்றும் பாடம்.                    (224)

49.தனுசர்தானைதனைமதியாதொரு
மனுசன்வந்து மலையமதிப்பதோ
அனுசருங்கொலையாடலவுணரும்
குனிசெயுஞ்சிலையென்றுகொதித்திட்டார்.

     (இ-ள்) தனுசர்தானைதனைமதியாது - அசுரசேனைகளை ஒருபொருளாக
எண்ணாமல்,ஒரு மனுசன் வந்து மலையமதிப்பதுஓ- மனிதனொருத்தன்வந்து
(அதனோடு)போர் செய்ய எண்ணுவதோ? அனுசர்உம் -
இளையோராகியஅசுரர்களும், கொலைஆடல் அவுணர்உம் - (பகையைச்)
கொல்லுதற்றொழிலிற்பயிற்சியையுடைய (மூத்தோராகிய) அசுரர்களும், சிலை-
(தங்கள் தங்கள்) வில்லை,குனி செயும்- வளைத்தலைச்செய்யுங்கள், என்று -
என்று (தம் இனத்தாரை நோக்கிக்) கூறி, கொதித்திட்டார்-(அசுரர்கள்)
கோபித்தார்கள்;(எ-று).