கின்ற கடல்களின்ஓசைபோல, புலம்ப - ஒலிக்கவும்,-(எ-று.)- இச்செய்யுளில் 'புலம்ப'என்பதும், மேற்செய்யுளில் 'மிடைய'என்பதும், அதன் மேற்கவியிலுள்ள 'வளைத்தார்'என்பதோடு முடியும். சங்கு, முரசு -வடசொற்றிரிபுகள். முழா என்னுங் குறியதன் கீழ் ஆக்குறுகி உகரமேற்று, 'முழவு'என நின்றது;[நன்- உயிர் - 22.]கண்- வாச்சியத்தில் அடிக்கப்படும் இடம்;வாரினாற்கட்டப்படுகிற கண்களுமாம். புலம்பல் - ஒலித்தல்;இனி, புலம்ப-(மேல் நிகழும் அசுரநாசத்தைக் கருதி) அழ என்றுமாம். பிரளய காலத்திற் கடல்பொங்கி உலகை யழிக்கு மென்பது, நூற்றணிபு (229) 54.-அசுரர்களின்பலவகைப்போர்க்கருவிகள் நெருங்குதல். சூலநேமியெழுமழுத்தோமரம் கோலும்வார்சிலைகுந்தங்கொடுங்கணை நாலுதானைநடுவுஞ்சுடரயில் வேலும்வாளின் விதமுமிடையவே. |
(இ-ள்.)சூலம்-சூலங்களும், நேமி - சக்கரங்களும், எழு - வளை தடிகளும், மழு - பரசுகளும், தோமரம் - தோமரங்களும், கோலும் வார் சிலை- வளைதற்குஉரிய நீண்ட விற்களும், குந்தம் - ஈட்டிகளும், கொடு கணை- கொடிய அம்புகளும், நாலு தானைநடுஉம் சுடர் அயில் வேல்உம் - நால்வகைச் சேனையின்நடுவிலும் விளங்குகின்ற கூர்மையையுடைய வேல்களும், வாளின் விதம்உம்-வாட்களின் வகைகளும், (ஆகிய பலவகை ஆயுதங்கள்), மிடைய - நெருங்கவும்-(எ-று.) தோமரம்என்று-இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும் பெயர். நாலு - நான்கு என்பதன் திரிபு. காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில்பூண்ட முக்கட்கடவுட்குங் கூற்றுவனுக்குஞ் சூலவேல் படையாதலாலும் முருகற்கு வேல் ஆயுதமாதலாலும், சான்றோர்வேலையே சிறப்பப் பெரும்பான்மை கூறுதல்பற்றி, அதற்கு'நாலுதானைநடுவுஞ்சுடர்' என்னும் விசேஷணங்கொடுத்தார்;இனி, இவ்வடைமொழியை வாளுக்குங் கூட்டுதலும் ஒன்று. வாள்-ஈர்வாள், உடைவாள், எறிவாள் எனப் பலவகைப் படுதலால், 'வாளின்விதம்'என்றது. (230) 55.-அருச்சுனன்தனித்தேரை அசுரர்தேர்களெல்லாம் சுற்றிக்கொள்ளுதல். முந்துகோப வசுரர்முடுகுதேர் உந்துவீர னொருதனித்தேரினை வந்துசூழ வளைத்தார்மதுமலர்க் கொந்துசூழ்வரி வண்டின்குழாத்தினே. |
|