கில்லாததிதிமக்களாகிய அசுரர்கள், தேர் உந்தினர்-தேரை எதிரிற் செலுத்தி வந்தார்கள்;(எ-று.)-தைத்தியர்என்ற இது-தயித்தியர் எனப் போலிபெற்று, மோனைப்பொருத்தம்நோக்கி, தெயித்தியர் எனத் திரிந்துநின்றது. (241) 66.-போர்செய்யஅஞ்சிய தானவரைநோக்கி அஞ்சாதவர் கூறியது. என்னேயொருமா னுடனுக்கெவரும் கொன்னேயடலாண் மைகொடுக்குமதோ இன்னேயிவனாவியழித்திமையோர் முன்னேவயவா கையுமுற்றுவமால். |
மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.)என்னே - (இது) என்ன செய்கை? ஒரு மானுடனுக்கு - மனிதனொருவனுக்கு,எவர்உம் - (அசுரர்கள்) யாவரும், கொன்னே - வீணாக,அடல் ஆண்மை - பல பராக்கிரமங்களை,கொடுக்குமதுஓ - இழப்பது தகுதியோ? இன்னே - இப்பொழுதே, இவன் ஆவி அழித்து - இவனது உயிரை உடம்பினின்று ஒழித்து, [கொன்றுஎன்றபடி],இமையோர் முன்னே-தேவர்களது முன்னிலையிலே,வயம் வாகைஉம் - வெற்றிக்கு அடையாளமான வாகைப்பூமாலையையும்,முற்றுவம் - குறைவின்றி அணிவோம்;(எ-று.)-'என்றுகூறி'என வருவிக்க. ஆல் - அசை: தேற்றமுமாம். என்-எவனென்னும் அஃறிணைமுற்றின்விகாரம்;ஏ-சாரியை. கொன் - பயனின்மைப்பொருள் குறிப்பதோர் இடைச்சொல்;இமையாக்கண்ணராகலின், 'இமையோர்'என்றார்: இவ்வினையாலணையும்பெயரில்எதிர்மறை யாகாரம் புணர்ந்து கெட்டது: விகுதிமுதலாகாரம் ஓவாயிற்று. இனி, இமையில் (மூடாமையாகிய) விசேஷமுடையவரென்றுமாம். முன், இங்கே-இடமுன். வாகை என்னும் மரத்தின்பெயர், இங்கே, இருமடியாகுபெயர். வென்றோர் வாகைமாலைசூடுவரென்பது, தமிழர்மரபு. முற்றுவம் - நீங்களும் யாமும் என முன்னிலையாரைத்தம்மோடு உளப்படுத்தி அதற்கு உரிய அம்விகுதி பெற்றுவந்த தன்மைப்பன்மைமுற்று;[நன்- வினை- 13.] (242) 67.-இதுமுதல்ஐந்துகவிகள் - தானவருடன் அருச்சுனனுக்குக்கடும்போர் விளைய, அவன் அவர்களொழியுமாறுபிரமாஸ்திரந் தொடுத்தமை கூறும். காளப்புயலென் னநிறங்கரியார் மீளப்படைகொண் டுவிரைந்துவெகுண்டு ஆளித்திறன்மொய்ம் பனையங்கடலால் வாளக்கிரியென் னவளைந்தெவரும். |
|