பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்173

மாறுஆய்-பகையுடையதாய், அவர்-அவ்வசுரர்களுடைய என்றும் உரைக்கலாம்.
வாள்-உரிச்சொல்.                                          (249)

74.-இருகோடியசுரர்திரண்டுஅருச்சுனனோடுபொர
நெருங்குதல்.

குருகோடியையுங் குருதிக்கடல்வாய்
ஒருகோடிதயித் தியராருயிருண்டு
அருகோடியவாளி யடர்ப்பதுகண்டு
இருகோடியுமுற் றனமற்றிவன்மேல்.

     (இ-ள்.) அருகுஓடிய வாளி-(அவ்வசுரர்களது) சமீபத்திலே
விரைந்துசென்ற அந்த அஸ்திரம், குருகோடு இயையும் குருதி கடல்வாய்-
(கழுகு முதலிய புலாலுண்ணும்) பறவைகளோடு பொருந்திய
இரத்தசமுத்திரத்திலே, ஒரு கோடி தயித்தியர் ஆர்உயிர் உண்டு-ஒருகோடி
அசுரர்களது அருமையான உயிரை (உடம்பினின்று எடுத்து) உட்கொண்டு,
அடர்ப்பது-அழித்துவருவதை, கண்டு-பார்த்து, இருகோடிஉம்-(அசுரர்களது
மற்றை) இரண்டுகோடித் தொகையும், இவன்மேல்-அருச்சுனன்மேலே,
உற்றன-வந்து நெருங்கின;(எ-று.)-மற்று-அசைநிலை;வேறு என்னும்
பொருள தாக்கி, மற்றிருகோடி யென இயைத்தலுமாம்.           (250)

வேறு.

75.-இதுமுதற்பதினான்குகவிகள்- பலவகைப் படைகள்
கொண்டு அருச்சுனனும்அசுரசேனைகளும்பொர,
அசுரசேனைதேய்ந்தமை கூறும்.

இருண்டதுமண்ணும் விண்ணு மெல்லையெண்டிசையு மெங்கும்
புரண்டது குருதிவெள்ள மூழிவெங் கடலிற் பொங்கி
முரண்டகுதேரோன் றன்னைமொய்த்தவெம் பனிபோன் மூடித்
திரண்டதுதிருகி மீண்டுந் திறலுடைத் தகுவர் சேனை.

     (இ-ள்.)மண்உம் - பூமியும், விண்உம்-ஆகாயமும், எல்லை
எண்திசைஉம் - எட்டுத்திக்குகளின் எல்லைகளும்,இருண்டது - (தனித்தனி
இறந்துபோன அசுரர்திரளால்) இருட்சியடைந்தது;குருதி வெள்ளம்-
(அவர்களது) இரத்தப்பெருக்கம், ஊழி வெம் கடலின்-பிரளயகாலத்துக்
கொடிய கடல்போல, பொங்கி (மேன்மேல்) அதிகப்பட்டு, எங்குஉம்-
எவ்விடத்தும், புரண்டது-(அளைகளோடு)பரவிற்று;திறல் உடை தகுவர்
சேனை-வலிமையையுடைய(மற்றை இருகோடி) அசுரர்களுடைய சைனியம்,
முரண் தகு தேரோன் தன்னை-வலிமைபொருந்தியதேரையுடைய சூரியனை,
மொய்த்த-(சுற்றிலும்) நெருங்கி மறைத்த, வெம் பனி போல்-கொடிய பனி
போல, (முரண் தகு தேரோன் தன்னை)- வலிமைபொருந்திய தேரையுடைய
அருச்சுனனை,மூடி-மறைத்து, மீண்டுஉம் - மறுபடியும், திருகி திரண்டது-
சுற்றிலும் வளைந்துகூடிற்று.(எ-று.)