பக்கம் எண் :

194பாரதம்ஆரணிய பருவம்

111.-மாதலியின்சொற்கேட்ட அருச்சுனன் அவரை
முடித்த பின்பேஅமராவதி செல்வேனென்று வஞ்சினங்
கூறல்.

தன்றேர்வலவன்மொழிகேட்டுத் தயங்குநீலக்
குன்றேயனையான்கொடும்போர்வஞ்சினங்கள்கூறி
இன்றேயிவராவியுந்தென்புலத் தேற்றிப்பின்னர்
அன்றேயினிநானமராவதி செல்வதென்றான்.

     (இ - ள்.)தன் தேர் வலவன் மொழி கேட்டு - (இங்ஙனம்) தனது
தேர்ப்பாகனாகியமாதலி சொன்ன வார்த்தையைச் செவியுற்று, தயங்கு நீலம்
குன்றுஏ அனையான்- விளங்குகின்ற நீலநிறமுள்ள மலையையேயொத்த
அருச்சுனன், கொடு போர் வஞ்சினங்கள் கூறி - கொடிய யுத்தத்துக்கு உரிய
பல சபதங்களைச்சொல்லி,'இன்றுஏ-இப்பொழுதே,இவர் ஆவிஉம்-
இவ்வசுரர்களது உயிரையும், தென் புலத்து ஏற்றி-தென்திசையிலுள்ள
யமலோகத்திற் சேரச்செய்துவிட்டு, பின்னர் அன்றுஏ-பின்பன்றோ,இனி-,
நான்-, அமராவதி - சுவர்க்கலோகத்துள்ள நகரத்துக்கு, செல்வது -
போவது',என்றான்- என்று பிரதிஜ்ஞை செய்தான்;(எ-று.)

     அமராவதி -அமரர்களையுடையதுஎனத் தேவேந்திரனது
இராசதானிக்குக் காரணக்குறி.                          (287)

112.-அருச்சுனன்அந்நகர்மீது தேரை யேவுக என்ன,
மாதலி அங்ஙனேசெய்தல்.

இந்தப்புரத்தின்மிசைத்தேரினையேவுகென்னாக்
கந்தற்குவமைதகுதிண்டிறற் காளைகூறச்
சிந்தைக்குமுந்துந்தடந்தேரைத் தனுசர்வைகும்
அந்தப்புரத்தில்விடுத்தான்மற் றவனுமாதோ.

     (இ - ள்.)'இந்தபுரத்தின்மிசை - இந்நகரத்தின் மேலே, தேரினை
ஏவுக - தேரைச் செலுத்துவாயாக,'
என்னா- என்று, கந்தற்கு உவமை தகு
திண் திறல் காளை- (எல்லா வீரர்களுக்கும் உபமானமாகச்
சொல்லப்படுகிற) முருகக்கடவுளுக்கும் உபமானமாகத்தக்க மிக்க
வலிமையையுடைய வீரனானஅருச்சுனன், கூற-சொல்ல,-அவன்உம்-
மாதலியும், சிந்தைக்குஉம் முந்தும் தட தேரை - மனத்தினும் விரைந்து
செல்லுந் தன்மையுடைய பெரிய இரதத்தை, தனுசர் வைகும் அந்த புரத்தில்
- அசுரர்கள் வசிக்கின்ற அவ்விரணியபுரத்திலே, விடுத்தான்-செலுத்தினான்;
(எ-று.)

    கந்தன்=ஸ்கந்தன்.  உபமேயத்தினும் உபமானம் சிறந்திருத்தல்வேண்டு
மென்பது அலங்கார நூலாரது துணிபாதலால், அருச்சுனனது சிறப்புத்
தோன்ற, 'கந்தற்குவமைதகுதிண்டிறற்காளை'என்றார். காளை-
உவமவாகுபெயர்.  நினைத்தமாத்திரத்தில் எவ்வளவு தூரத்திலுள்ள
பொருளினிடத்துஞ் சென்று சேரு