இந்திரன்மொழியையனுசரித்து அருச்சுனன் பாசுபதம் பெற்றமை முதலியகூறி, இந்திரன்கூறிய செய்தியையுந் தெரிவித்தானென்று வியாசபாரதம் கூறும். 'துன்பமகலமிக'என்றும் பாடம். (341) 5.-இரண்டுகவிகள்- ஒருதொடர்: உரோமசன் அருச்சுனுடைய செய்திகளைச்சொல்லி, இந்திரன் விருப்பின்படிதான்வந்தமை தெரிவித்தல். வாள்விசயன்புரவிசயன்றன்னைநோக்கிமன்னுதவம்புரிந்ததுவு மகிழ்ச்சிகூர்ந்தவ், வேள்விசயந்தவிர்த்தபிரானருளால்வேண்டும் விறற்படைகளளித்ததுவும்விபுதர்கோமான், நாள்விசயம்பெறக்கொடுபோயும்பரூரினளிமகுடம்புனைந்ததுவு நாளுந்தன்பொன், தோள்விசயந்தொலைத்ததிறலவுணர்சேனை சுடுசரத்தாற்றொலைத்ததுவுஞ்சூழ்ந்த யாவும். |
(இ-ள்.) வாள்விசயன்-ஒளிபொருந்திய அருச்சுனன், புரம் விசயன் தன்னைநோக்கி - திரிபுரத்தைவென்றவனாகியசிவபிரானைக்குறித்து,மன்னு - நிலைபெற்ற,தவம் - தவத்தை, புரிந்ததுஉம் - செய்ததையும், மகிழ்ச்சி கூர்ந்து - மகிழ்ச்சிமிகுந்து, அ வேள் விசயம் தவிர்த்த பிரான் - அந்த மன்மதனுடைய வெற்றியைப் போக்கிய சிவபிரான், அருளால் - அருளோடு, வேண்டும்-(அருச்சுனன்) விரும்பிய, விறல் படைகள்-வலிமையுள்ள படைக்கலங்களை,அளித்ததுஉம் - கொடுத்ததையும், விபுதர்கோமான் - தேவர்கட்குத் தலைவனானஇந்திரன், உம்பர் ஊரின் கொடு போய் - தேவலோகத்து அமராவதிக்குக் கொண்டுபோய், நாள்-நல்ல நாளிலே, விசயம் பெற - வெற்றிபெறுமாறு, நளி மகுடம் புனைந்ததுஉம்- சிறந்த கிரீடத்தைத் தரிப்பித்ததையும், நாள்உம் - பலகாலும், தன் - இந்திரனது, பொன் தோள் விசயம் தொலைத்த- அழகிய தோள்வலிமையாற் பெறலாகும் வெற்றியை யொழித்த, திறல் - வல்லமையையுடைய, அவுணர் - (நிவாதகவசர் காலகேயர் என்ற) அசுரரின், சேனை- தொகுதியை, (அருச்சுனன்), சுடு சரத்தால் - எரிக்கவல்ல அம்புகளைக்கொண்டு, தொலைத்ததுஉம்- ஒழித்ததையும், சூழ்ந்த யாஉம் - மற்றுமுள்ள எல்லாவற்றையும்,-(எ-று.)-'வரைவழியேவருவதுவும்'என மேலே தொடரும். சிவபிரான்துவத்திலிருக்கையில்உமையினிடம்காதல் விளைவிக்கும்பொருட்டுத் தேவர்களின் தூண்டுதலால் அப்பிரான்மீது மன்மதன் மலரம்பைத் தொடுக்க, அப்போது அச்சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால்அந்த மதனனையெரித்தானாதலால், 'வேள்விசயந்தவிர்த்தபிரான்'என்றார். சூழ்ந்தயாவும் என்றது-ஊர்வசியாற் காதலிக்கப்பட்டுச் சாபம்பெற்றுச் சாபவிமோசனமும் பெற்றமையைக் காட்டுமென்னலாம். நளிர்மகுடம் என்றும் பாடம். (342) 6. | தன்னருகேயமரரெலாமினிதுபோற்றத் தனஞ்சயனங்கிருந்த தற்பின்றயங்குஞ்சோதி, மன்னுமெழிற்காந்தர்ப்பமென்னுநாம வரை வழியேவருவது வுமருவுகாதல், உன்னுடையபெருந்துயரந்தணுயுமாறு |
|