கொண்டும், கிராதர் போர் முழக்கம் கேட்டுஉம் - வேடர்களது போரிலுண்டாகின்றதொனியைச் செவியுற்றும், எரி கிளர் முழுக்கம் கேட்டுஉம் - காட்டுத்தீப் பற்றியெரிகின்ற ஆரவாரத்தைப் கேட்டுக் கொண்டும், - (அருச்சுனன் வழிநடந்து), எம்பிரான் - யாவர்க்குந் தலைவராகிய சிவபெருமான், இமவான் தந்த புரி குழலோடுஉம் - இமவத்பருவதம் பெற்ற கட்டிய கூந்தலையுடைய உமாதேவியுடனே, வைகும்-எழுந்தருளியிருக்கின்ற, புண்ணியம் பொருப்பை - நல்வினையையுடைய ஸ்ரீகைலாசகிரியை, சேர்ந்தான் - அடைந்தான்; (எ-று.) கைலாசத்துக்குப் புண்ணியம்-சிவபெருமான் தன்னிடம் எழுந்தருளியிருத்தற்கு ஏற்ற பாக்கியம். இனி, புண்ணியம் பொருப்பு- புண்ணியவடிவமான மலையுமாம்; புண்ணியத்தை வெண்ணிறமுடையதாக வருணித்தல் கவிசமயம். கிரிகளின் முழக்கம்-மலையிற்றோன்றும் எதிரொலி. (33) 34.-அருச்சுனன் ஆங்கிருக்குந் தவசியர்சொற்படியே தவவிரதம் பூணுதல். கைம்மலையுரிவையோடு கட்செவிக்கச்சுஞ்சாத்துஞ் செம்மலைவிழியிற்காணான் சிந்தையாற்கண்டுபோற்றி அம்மலைச்சாரறோறு மருந்தவம்புரிநர்கூற விம்மலைநீங்கியாங்கண் மெய்த்தவவிரதனானான். |
(இ-ள்.) (அருச்சுனன்),-கைம்மலை உரிவையோடு-யானைத்தோலுடனே, கட்செவி கச்சுஉம்-நாகமாகிய கச்சினையும், சாத்தும்-தரித்துள்ள, செம்மலை- சிவபெருமானை, விழியின் காணான்-புறக்கண்களாற் பாராதவனாய், சிந்தையால் கண்டு-நெஞ்சென்னும் அகக்கண்ணில் தரிசித்து, போற்றி- துதித்து,-அ மலை சாரல் தோறுஉம் அரு தவம் புரிநர் கூற விம்மலை நீங்கி-அந்தமலையின் பக்கங்களிலெல்லாம் (இருந்து பிறராற் செய்வதற்கு) அருமையான தவத்தைச் செய்கின்றவர்கள் (சமாதானஞ்) சொல்லியதனால் (கடவுளைப் பிரதியக்ஷமாகக் காணாமையாலாகிய) துன்பத்தை ஒழிந்து,- ஆங்கண் - அவ்விடத்தில், மெய் தவம் விரதன் ஆனான் - உண்மையான தவத்திற்குஉரிய விரதங்களை அநுஷ்டிப்பவனானான்; (எ-று.) விழியிற் காணான் தவம்புரிநர்கூற விம்மலைநீங்கிச் சிந்தையாற் கண்டு போற்றித் தவவிரதனானா னென்க. கையையுடைய மலையெனவே, யானையாயிற்று: அடையடுத்த உவமவாகுபெயர். கட்செவி - கண்ணையே செவியாகவுடையது: வேற்றுமைத்தொகை அன்மொழி. கச்சு-இடைக்கட்டு என்னும் அணி. ஒருகாலத்திற் பரமசிவன் தன்னை மதியாத தாருகாவனத்து முனிவர்களது மனநிலைமையைப் பரீட்சிக்க எண்ணித் தாம் ஒரு விட வுருவங்கொண்டு சென்று அவரில்லந்தோறும் பிட்சாடனஞ் செய்து, தம்மை நோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியர்களது கற்புநிலையைக் கெடச்செய்ய, அதுகண்டு |