38.-அருச்சுனனுடைய தவநிட்டை. ஒருதாளின்மிசைநின்றுநின்றதாளி னூருவின்மேலொருதாளை யூன்றியொன்றும், கருதாமன்மனமடக்கிவிசும்பினோடுங்கதிரவனைக் கவர்வான்போற்கரங்கணீட்டி, இருதாரைநெடுந்தடங்கணிமையாதோராயிரங்கதிருந்தாமரைப் போதென்னநோக்கி, நிருதாதிபரின்மனுவாய்த்தவஞ்செய்வாரினிகரிவனுக்கார் கொலெனநிலைபெற்றானே. |
(இ-ள்.) (அருச்சுனன்), ஒரு தாளின் மிசை நின்று-ஒருகாலை நிலத்திலூன்றி அதன்மேல் நின்றுகொண்டு, நின்ற தாளின் ஊருவின்மேல் ஒருதாளை ஊன்றி-நின்ற அக்காலினது தொடையின் மேல் மற்றொருகாலை ஊன்ற வைத்துக்கொண்டு, ஒன்றுஉம் கருதாமல் மனம் அடக்கி- (பரமசிவனைத்தவிர) யாதொரு விஷயத்தையுஞ் சிறிதும்நினையாதபடி மனத்தை அடங்கச்செய்து, விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி - ஆகாய மார்க்கத்தில் விரைந்து செல்லுகின்ற சூரியனைக் கைகளாற் பிடிக்க முயல்பவன்போலக் கைகளை மேலே உயர்த்தி வைத்துக்கொண்டு, இரு தாரை நெடு தட கண் இமையாது- கருவிழிகளையுடைய நீண்ட பெரிய கண்களிரண்டையும் இமைக்காமல், ஓர் ஆயிரம் கதிர்உம்-(சூரியனது) ஆயிரங்கிரணங்களையும், தாமரை போது என்ன நோக்கி-(ஆயிரம் இதழ்களையுடைய) தாமரைமலரைப் பார்ப்பதுபோலக் குளிரப்பார்த்துக்கொண்டு, நிருத அதிபரில் மனு ஆய் தவம் செய்வாரில்-தவத்தைச் செய்பவர்களாகிய இராக்கதத்தலைவர்களுள்ளும், இவனுக்கு நிகர் ஆர்கொல் என- இவ்வருச்சுனனுக்கு ஒப்பாவார் யாவரோ?(எவருமிலர்) என்னும்படி, நிலைபெற்றான்-(தவத்தில்) உறுதியாய் நின்றான்; (எ-று.) தாமரைப்பூவைப் பார்ப்பதுபோலச் சூரியகிரணங்களைக் குளிரப்பார்த்தன னென்பதாம். கதிரவன்-கிரணங்களையுடையவன்; மற்றையிருசுடர்களாகிய சந்திர அக்கினிகளுக்கு ஒளியைக் கொடுத்து வாங்குகிற சிறப்புப்பற்றி, பெருஞ்சுடராகிய சூரியனுக்குக் கதிரவன் என்று பெயர். தாரை-கண்ணின் கருவிழி. காசியப மகாமுனிவரின் மனைவியருள் ஒருத்திக்கு மனு என்று பெயர்: அச்சொல் - ஆகுபெயரால் அவளிடந்தோன்றிய மனிதரையுணர்த்திற்று. (38) 39.-அக்கினிகள் அருச்சுனனைச்சுடாமை. தோற்றியதெம்மிடத்தேயித்தோன்றன்மாலைசூட்டியபொற்றொடி யென்றோதுரங்கம்பொற்றேர், கூற்றியல்வெஞ்சிலைபாணந்தூணி நாணிகுரக்குநெடுங் கொடிமுன்னங் கொடுத்தே மென்றோ, காற்றினுடன்விரைவுறச்சென்றருந்துமாறுகாண்டவநம்பசிக் களித்தகாளையென்றோ, நாற்றிசையும்வளர்த்ததழற்கடவுளந்த நரனுடலங்குளிர் விக்குநாரம்போன்றான். |
(இ-ள்.) 'இ தோன்றல்-விளங்குகின்ற இவ்வருச்சுனனுக்கு, மாலை சூட்டிய - மணமாலையைச் சூட்டின, பொன் தொடி-பொன்னி |