பக்கம் எண் :

282பாரதம்ஆரணிய பருவம்

தான்;சிலரை-,எண்ணம் முடித்தனன் - (அவர்கள்கொண்ட) எண்ணத்தைப்
பாழாக்கினான்;சிலரை-,போக முகிழ்த்தனன் - அழிந்துபோம்படி
ஒடுக்கினான்;சிலரை-,கண்டம் ஒடித்தனன்-கழுத்தை முறித்தான்;சிலரை-,
அஞ்ச உறுக்கினன் - பயப்படும்படி அதட்டினான்;(எ-று.)

    இச்செய்யுளிலும் இதற்குமுந்தின செய்யுளிலும் சிலரையென வந்த
சொல்லும்பொருளும் மீண்டும் பலவிடத்தில் வந்தது, சொற்பொருட்பின்
வருநிலையணி. போகம் முகிழ்த்தனன் என்று பிரித்து - வீரசுவர்க்க
இன்பம் அரும்பச்செய்தன னெனினும் அமையும்.  மன், ஓ-ஈற்றசை. (436)

100.கரக்கழுந்ததனினானுங்கனவரைத்தோளினானும்
வரக்கொடுங்கதையினானுமராமரப்பணையினானும்
உரக்கடுங்காலினானுமொருக்கினானுரைப்பதென்னோ[னோன்.
அரக்கரையென்றாற்பின்னைவிடுங்கொலோவனுமன்பின்.

     (இ-ள்.) கரம்கழுந்து அதனினான்உம்- (தனது) கைகளாகிய
தண்டங்களாலும், கனம் வரை தோளினான்உம்- பெரிய மலைகள்போன்ற
(தனது) தோள்களாலும், வரம் கொடு கதையினான்உம்- சிறப்பான கொடிய
(தனது) கதாயுதத்தாலும், மராமரம், பணையினான்உம்- மராமரமென்னும்
மரத்தினது கிளைகளாலும்,உரம் கடுகாலினான்உம்- வலிமையையுடைய
கடுமையான (தனது) கால்களாலும், ஒருக்கினான்-(அரக்கர்களைவீமன்)
அழியச்செய்தான்;உரைப்பது என்ஓ-(இனி நாம்) சொல்லவேண்டுவது யாது
உளது? அரக்கர் என்றால்- (வந்து எதிர்ப்பவர்) இராக்கதராயிருந்தால்,
பின்னை- பின்பு, அனுமான் பின்னோன்-அனுமானதுதம்பியானவன்
[வீமன்],விடும்கொல் ஓ - (அவர்களைஉயிரோடு) விட்டிடுவானோ?
[விடானென்றபடி];(எ-று.)

     தன்னையெதிர்த்துப் பொருதுவந்த இராவணன்மகனானஅக்ஷகுமாரன்
முதலிய சிறந்த இராக்கத வீரர் பலரையும் விடாமல் விரைவிற்
கொலைசெய்தஅநுமான்போலவே, அவன் தம்பியாகிய வீமனும்
தன்னையெதிர்த்தஅரக்கர் பலரையும் விடாது பலவகையால் அழியச்செய்தா
னென்றவாறாம். இங்கு வீமனை'அனுமன்பின்னோன்'என்றது -
கருத்துடையடைகொளியணியாம்.  கரக்கழுந்ததனினானும்- கையிலுள்ள
தனுர்த்தண்டத்தாலும் என்றுமாம்.  ஒருக்கினான்,ஒருங்கு என்பதன்
பிறவினையானஒருக்கு - பகுதி: ஒருக்குதல்-ஒடுங்கச்செய்தல்.  அரக்கரை,
ஐ-சாரியை                                               (437)

101.-வீமனைவேறு இலட்சம் அரக்கவீரர் மீண்டும்
சூழ்தல்.

இப்படிக்கெதிர்த்தசேனையாவையுமிமைக்குமுன்னம்
துப்புடன்றொலைத்துவாயுசுதனின்றவுறுதிநோக்கி
மைப்படிவரைகள்போல்வார் வாளெயிற்றரக்கர்பின்னும்
கைப்படைகொண்டுநூறாயிரரொருகணத்திற்சூழ்ந்தார்.