லால், நரனென்று அருச்சுனனுக்கு ஒரு பெயர்: இதனை மேலே கீதையிற் கண்ணன் "உன்னையான் பிரிவதில்லை யொருமுறை பிரிந்து மேல்நாள், நன்னிலா வெறிக்கும் பூணாய் நரனு நாரணனுமானோம்" , "இந்நெடும் பிறப்பில் நீயும் யானுமாயீண்டு நின்றோம்" என்றதனாலும் அறிக. (39) 40.-சிவத்தியானத்தால் அருச்சுனன் உடம்புஎங்கும் புளகங்கொண்டு நிற்றல். வலப்பாகஞ்செழும்பவளச்சோதியென்ன வாணீலச்சோதியென்ன மற்றப்பாகங், கலப்பானதிருமேனியணிந்தநீற்றாற் கதிர்முத்தின் சோதியெனமேனையீன்ற, குலப்பாவையுடன்கயிலைக் குன்றில் வாழ்விற்குன்றுடை யோன்றிருக்கோலங்குறிப்பாலுன்னிப், புலப்பாடுபுறம்பொசியமார்புந்தோளும்பூரித்தானுடல் புளகம்பாரித்தானே. |
(இ - ள்.) வலம் பாகம் - (சிவரூபமான) வலப்பக்கம், செழுபவளம் சோதி என்ன-அழகான பவழத்தினது ஒளிபோலச் சிவந்திருக்கவும், மற்ற பாகம் - (பார்வதீ ரூபமான) மற்றொரு [இடப்] பக்கம், வாள் நீலம் சோதி என்ன - பிரகாசமான நீல ரத்தினத்தினது ஒளிபோலக் கறுத்திருக்கவும், கலப்பு ஆன - (ஆண்வடிவமும் பெண்வடிவமுங்) கலந்ததான, திருமேனி- திவ்வியசொரூபம், அணிந்த நீற்றால் - சாத்திக்கொண்டுள்ள விபூதியினால், கதிர் முத்தின் சோதி என - பிரகாசமான முத்தினது ஒளிபோல வெளுத்திருக்கவும், மேனை ஈன்ற குலம் பாவையுடன்-மேனகையென்பவள் [இமய பருவத்தின் மனைவி] பெற்ற சிறந்த சித்திரப்பிரதிமை போல மிக அழகிய உமாதேவியுடனே, கயிலை குன்றில்-ஸ்ரீகைலாசகிரியிலே, வாழ் - எழுந்தருளியிருக்கின்ற, வில் குன்று உடையோன் - மேருமலையை வில்லாகவுடைய பரமசிவனது, திருக்கோலம் - திருவுருவத்தை, குறிப்பால் உன்னி - மனத்தால் தியானஞ் செய்துகொண்டு, (அருச்சுனன்), புலப்பாடு புறம் பொசிய - (உள்ளே) விளங்குகின்றசிவத்தியானம் (ஆனந்தக் கண்ணீரொழுகுதல் முதலியவற்றால்) வெளியே தோன்றாநிற்க, மார்புஉம் தோளஉம் பூரித்தான்-டதனது) மார்பும் தோள்களும் (சிவனாந்தத்தால்) பெருகப்பெற்றான்;உடல் புளகம் பாரித்தான்-உடம்பு புளக முண்டாகப்பெற்று நின்றான்; (எ- று.)-அர்த்தநாரீசுவரமூர்த்தியாதலால், இவ்வாறு வருணித்தார். குலப்பாவை - உயர்குலத்துத் தோன்றிய மகளுமாம். மனத்திற்குத் திருப்தியுண்டாகுமளவும் கலைத்துக் கலைத்து மிகச் சீர்திருத்தமாக எழுதக்கூடு மாதலால், சித்திரப்பாவை மிக அழகியதாம். புலப்பாடு - ஒருவரது உள்ள நிகழ்ச்சி ஆங்கு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் வகையால் வெளிப்படுதல்; என்றது - கண்ணீரரும்பலும் மெய்ம்மயிர்சிலர்த்தலும் முதலாக உடம்பில்வரும் வேறுபாடுகளை: இவை சாத்துவிகபாவம் எனப்படும். மார்புந்தோளும் பூரித்தான், உடல் புளகம் பாரித்தான் - மார்பு முதலிய அஃறிணைச் சினைப்பெயர்கள் உயர்திணை முதற் |