பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்31

பெயரின்வினையைக் கொண்டு முடிந்தன: திணைவழுவமைதிகள்: [நன்-
வினை. 26] குறிப்பாலுள்ளும் என்றும் பாடம்.                    (40)

41.-கவிக்கூற்று: அருச்சுனன் தவம்புரிந்த சிறப்பைக்
கொண்டாடுதல்.

கருந்துறுகல்லெனக்கருதிப்பிடியுங்கன்றுங்  களிற்றினமுமுட
                           னுரிஞ்சக்கறையானேறிப்,
பொருந்துமுழைப்புற்றதெனப்புயங்கமூரப்பூங்கொடிகண்
                          மரனென்று பாங்கேசுற்றப்,
பரிந்துவெயி னாண்மழை நாள்பனிநா ளென்று பாராம
                   னெடுங்காலம் பயின்றான்மண்ணில்,
அருந்தவமுன்புரிந்தோரிலிவனைப்போன்மற் றார்புரிந்தார்
                            சிவசிவவென்றரியவாறே.

     (இ-ள்.) பிடிஉம்-பெண்யானைகளும், கன்றுஉம்-யானைக் கன்றுகளும்,
களிறு இனம்உம்-ஆண்யானைக் கூட்டங்களும், (தவ நிலையிற்சலியாமல்
நின்ற அருச்சுனனது உடம்பை), கரு துறு கல் என கருதி-கரிய
துறுகல்லென்று நினைத்து, உடன் உரிஞ்ச-பொருந்திஉராயவும்,-புயங்கம்-
பாம்புகள், கறையான்ஏறி பொருந்தும் முழை புற்று அதுஎன -
செல்லுகள்வந்து ஏறித்தங்குதலால் துளையாகிய புற்றென்று நினைத்து, ஊர-
மேலே தவழவும்,-பூ கொடிகள்-பூக்களையுடைய கொடிகள், மரன்என்று-
மரமென்று கருதி, பாங்கு சுற்ற-(நான்கு) பக்கங்களிலும் சுற்றிக்கொள்ளவும்,
வெயில்நாள் மழைநாள் பனிநாள் என்று பாராமல்-வெயில்காயுங்
காலமென்றும் மழைபெய்யுங்காலமென்றும் பனிபெய்யுங்காலமென்றும்
அருமை பாராட்டாமல் (எக்காலங்களிலும்), பரிந்து-வருந்தி, நெடு காலம்-
பலநாள், சிவசிவ என்று-சிவசிவ என்று (சிவநாமத்தை விடாமல்)
உச்சரித்துக்கொண்டு, பயின்றான்-(அருச்சுனன்) தவஞ்செய்தான்; மண்ணில்-
பூலோகத்தில், அருதவம் முன் புரிந்தோரில்-(செய்வதற்கு) அருமையான
தவத்தை முற்காலத்திற் செய்தவர்களுள், இவனை போல்-இவ்வருச்சுனனைப்
போல, மற்று ஆர் புரிந்தார்-வேறு யார் தவஞ்செய்தார்கள்?(எவருமில்லை);
அரிய ஆறுஏ-(இவன் செய்த தவம்) அருமையான விதமேயாம்; (எ-று.)

     அருச்சுனன் அசையாதுநின்று தவம்புரிதலால் அவனுடலைக்
கருநிறமுள்ள துறுகல்லென்று கருதிப் பிடியுங் களிறும் அவனுடலின்மீது
உராயலாயின: அவனுடலைச் சுற்றிக் கறையா னேறவே பாம்புகள்
புற்றென்றுகருதி அங்கு ஊரலாயின: அவனுடலை மரமென்று கருதிப்
பூங்கொடிகள் சுற்றி வளரலாயின: இங்ஙனமாக எல்லாக் காலங்களிலும்
சலியாது நின்று இடைவிடாமல் தவத்தைப் பயின்றானென்க மயக்கவணி.(41)
    
42. பகிரதனே முதலானவெண்ணில்கோடிப் பார்த்திவருந்
               தவம்புரிந்தார்பைம்பொன்மேனி,
இகலவுணர்முதலான ககனவாணரெத்தனைபேர்தவம்
                    புரிந்தாரிமையோரேத்தும்,
மகபதிதன்மதலையிவனெழுதொணாதவனப்பினுக்கு
            வரிசிலைக்கைம் மதவேளொவ்வான்,