(இ-ள்.) புலவுகால் - (தசையுண்ணுதலாற்) புலால் நாற்றத்தை வீசுகிற, வயிரம் வாள் எயிறு இரண்டுஉம் - வயிரம்போல் உறுதியான கூர்மையான (தனது) தந்தங்கள் இரண்டும், முதலொடுஉம் போன-வேரோடு ஒழியப்பெற்ற, வாள் நிருதன் - கொடுமையையுடைய அவ்விராக்கதன்,-நிலவுஇலா நிசிஉம் - சந்திரகாந்தியில்லாத இராத்திரியையும், மின் இலா இடி கொள் நீலம் மாமுகிலைஉம்- மின்னலில்லாத இடித்தலைக்கொண்ட நீலநிறமுள்ள பெரிய மேகத்தையும், நிகர்த்தான் - ஒத்தவனாய்,-மீள- மறுபடி, கொதித்து எழுந்து - கோபங்கொண்டு எழுந்திருந்து, இரு கரம் கொண்டு - (தனது) இரண்டு கைகளால், மலையின்மேல்உரும் உற்று என்ன - மலைமேலே இடிவிழுந்தாற்போல, குலவு தோள் வாயு குமரன்மேல் - விளங்குகின்ற தோள்களையுடையவாயுவின் குமாரனானவீமசேனன்மீது, அவன்தன் மார்புஅகம் சுழிதர-அவனது மார்பினிடம் குழிபடும்படி, புடைத்தான் - தாக்கினான்;(எ-று.)-மற்று - அசை. நிலவும்மின்னலும் வெண்மையாக விளங்குங் கோரப் பல்லுக்கும், நிசியும் முகிலும் கரிய வடிவுகொண்ட அரக்கனுக்கும் உவமை. இடிகொள் முகிலென முகிலைவிசேடித்தது, அரக்கன் கர்ச்சனையாரவாரமுடைமையின். வயிரம்-வச்சிராயுதமும் மரவயிரமுமாம் வாயின் வாளெயிறு என்றும் பாடம். 'சுளிதர'என்றபாடத்துக்கு - ஒடிய வென்க. (493) 18. | முட்டியால்வஞ்சமூர்க்கனுஞ்சமர மொய்ம்பனு முறைமுறை யாக, மட்டியேமுதலாவுள்ளமற்றொழிலின்வல்லனவல்லனபுரிந்து, கட்டியேகுறங்குகுறங்குடன்பகைப்பக்கரங்கரத்தொடுநனி பிணங்க, ஒட்டியேமுடுகியொரு வருக்கொருவருரத்துடன்மோதினா ருரவோர். |
(இ - ள்.)உரவோர் - வலிமையையுடையவர்களாகிய, வஞ்சம் மூர்க்கன்உம்-வஞ்சனைக்குணமுள்ளமூர்க்கனானசடாசுரனும், சமரம் மொய்ம்பன்உம்-போரில் ஆற்றலையுடையவீமனும், முறை முறை ஆக-மாறி மாறி, முட்டியால்-(தமது) கைப்பிடியால், மட்டிஏ முதல் ஆ உள்ள மல்தொழிலின்-மட்டியென்பதை முதலாகவுடைய மற்போர்த்தொழில்வகைகளுள், வல்லன வல்லன புரிந்து - (தாந்தாம்) வல்லவிதங்களைச்செய்து, குறங்கு குறங்குடன் பகைப்ப - ஒருவர் தொடை ஒருவர்தொடையுடனே மாறுபடும்படி, கட்டி - கட்டிக்கொண்டும், கரம் கரத்தொடு நனி பிணங்க ஒட்டி - ஒருவர்கைகள் மற்றொருவர்கைகளோடு நன்றாகமாறுபடும்படிபின்னிக்கொண்டும், முடுகி - உக்கிரங்கொண்டு, ஒருவருக்கு ஒருவர்-ஒருத்தருக்கொருத்தர், உரத்துடன்-உறுதியுடனே, மோதினார்-தாக்கினார்கள்;(எ - று.) முட்டி - முஷ்டி:சமரம் - ஸமரம்:வடசொற்கள். மட்டி - மற்போர்த்தொழில்வகைகளில் ஒன்று. மல்தொழில் - ஆயுதமில்லாமல் உடம்பினு றுப்புகளைக்கொண்டுசெய்யும் போர். ஒட்டி - வீரவாதஞ்செய்து என்றுமாம். (494) |