யெனினுமாம். அதிபதியா மெண்ணாயிரமியக்கேசரும்என்ற பாடம் எண்வழுவாம். (523) 22.-எண்ணாயிரவர்சேனாதிபதிகள்வீமனைவளைத்தல். தாமப்புரிசையின்வாயிலெ ழுந்தானையின்வெள்ளம் நேமிக்கிரிநெரியப்புரி நெடுவெள்ளநிகர்ப்பத் தூமனக்கனல்சொரிகண்ணின ரெண்ணாயிரர்தொலையாச் சேமக்கவசியர்வீமனைத்திரையாழியிற்சூழ்ந்தார். |
(இ-ள்.)தாமம் - ஒளியையுடைய, புரிசையின் - (அவ்வளகாபுரியின்) மதிலினது, வாயில் - கோபுரவாயிலினின்று, எழும் - புறப்பட்ட, தானையின் வெள்ளம் - சேனையின்கூட்டம்,நேமி கிரி நெரிய புரி - சக்கரவாளமலையும்அழியும்படி செய்கின்ற, நெடு வெள்ளம் நிகர்ப்ப - பெரிய (பிரளயகாலக் கடல்) வெள்ளத்தை யொத்திருக்க, தூமம் கனல் சொரிகண்ணினர்-புகையோடுகூடிய நெருப்பை யுமிழ்கிற கண்களை யுடையவர்களும், தொலையாசேமம் கவசியர்-(ஆயுதங்களால்) அழியாத (உடம்புக்குக்) காவலான கவசத்தை யணிந்தவர்களுமாகிய, எண்ணாயிரர்- எட்டாயிரவரான சேனாபதிகள்,திரை ஆழியின-அலைகளையுடைய கடல்போல, வீமனைசூழ்ந்தார்-வீமசேனனைவந்துவளைத்தார்கள்;(எ-று.) பூமியைச்சூழ்ந்துள்ள கடலைச்சுற்றிலும் கோட்டைமதில்போலச் சூழ்ந்துள்ளது சக்கரவாளமலையென நூல்கள் கூறும். அந்த நகரத்துக்குக் கோட்டை மதில்வாயிலிலே நிறைந்துபரவிய சேனைக்குச் சக்கரவாளகிரியின்மீது பரவிய பெருங்கடலைஉவமைகூறினார். வெள்ளம் - ஒருபேரெண். சேமம்-க்ஷேமம். கவசி=கவசீ: கவசத்தை யுடையவன்: வடசொல்;கவசம் - இரும்பு முதலியவற்றாலாகிற உடம்பின் மேற்சட்டை; இது, போரிற் பகைவரெறியும் படைக்கலங்களைஉடம்பிற் படாது காப்பது. (524) 23.-சேனைக்கடலிடையே நிற்கும் வீமன் வருணனை. உதிக்குஞ்சுடரோராயிர முருக்கொண்டெனவொளிகூர் விதிக்குஞ்சமர்தொலையாவிறல்விச்சாதரர்வெள்ளக் கொதிக்குங்கடலிடைநின்றிடு குமரன்குரைகடன்முன் மதிக்கும்படிநெடுமாலிடு மாமந்தரமொத்தான். |
(இ-ள்.)உதிக்கும் சுடர் ஓர் ஆயிரம் - உதயமாகின்ற ஒரு ஆயிரஞ்சூரியர்கள், உரு கொண்டு என - (இச்சேனையின்)வடிவத்தைக் கொண்டாற்போல, ஒளி கூர் - தேககாந்தி மிகுந்த, விதிக்குஉம் சமர் தொலையாவிறல் விச்சாதரர் வெள்ளம் - (படைத்தற்கடவுளான) பிரமனுக்கும் போரில் அழிக்கவொண்ணாதவலிமையையுடைய வித்தியாதரர்களின் கூட்டமாகிய, கொதிக்கும் கடல் இடை-பொங்கியெழுகிற கடலின் நடுவே, நின்றிடு - (போருக்கு) நிலையாய்நின்ற,குமரன்- இளம்பருவமுடையவனானவீமன், குரை கடல் முன் மதிக்கும்படி நெடு மால் இடும் மா மந்தரம் ஒத்தான்-ஒலிக்கின்ற பாற்கட |