கொண்டஅவ்வித்தியாதரர்களது தலைமூளையும்உடற்கொழுப்பும் வாய்வழியாக வெளிப்படும்படி, மொய்ம்பின் முருக்குதலும்-வலிமையோடு அழித்தவளவில்,-பொரும் பொருநர் எல்லாம்-போர்செய்கிற வித்தியாதரவீரர்களெல்லோரும்,-தாள் உடை மருத்து எதிர் சரிக்கும் வகை எய்தும் பூளைவனம் ஒத்தனர் - முயற்சியையுடைய பெருங்காற்றுக்கு எதிரிலே சஞ்சரிக்கும்தன்மையைப் பொருந்தின இலவம்பஞ்சுத்தொகுதியைப் போன்றார்கள்;(எ - று.) பொருங்காற்றிக்கு எதிரில் இலவம்பஞ்சு பறப்பதுபோல, வீமனுக்கெதிரில் விஞ்சையர்கள்சிதறுண்டு பறந்தார்களென்பதாம். "காற்றிடைப்பூளைக்கரந்தையென வரந்தையுறக் கடலரக்கர் தம் சேனை" என்பது மங்கைமன்னன்மொழி. தாளுடைமருத்து-கால்களையுடையவாயு என்று உரைத்தால், இல்பொருளுவமையாம். விண்டு என்றவிடத்து 'மீண்டு' என்று பாடங்கொள்ளலாம். முருக்குதலு மார்பில் என்றும் பாடம். (546) 45. | சிந்துரமணிக்கொடிகொ டேர்புரவிகாலாள் அந்தகபுரத்தணுக லுற்றவொழியப்போய்த் தந்தமபுரத்தணுக லுற்றனசயப்போர் மந்தரவரைப்புயனு நின்றனன்மறத்தால். |
(இ-ள்.)சிந்துரம் - யானைகளும்,மணி கொடி கொள் தேர் - அழகியதுவசங்களைக்கொண்ட இரதங்களும், புரவி-குதிரைகளும், கால்ஆள-காலாட்களும், (என்னும் நால்வகைச்சேனையும்),அந்தகபுரத்து அணுகல் உற்ற ஒழிய-(போரிலிறந்து) யமலோகத்திற்சேர்ந்தவை தவிர, (மற்றவை),-போய்-(புறங்கொடுத்துச்)சென்று, தம் தம புரத்து அணுகல் உற்றன - தங்கள் தங்கள் இருப்பிடத்திற் சேரத்தொடங்கின; (அப்பொழுது),சயம் போர் மந்தரம் வரை புயன்உம்-வெற்றியைப்பெற்ற போரைச்செய்த மந்தரமலைபோன்றதோள்களையுடையவீமனும், மறத்தால் நின்றனன்-பராக்கிரமத்தோடு (அங்கு) நிலைநின்றான்;(எ-று.) மறத்தால்நின்றனன் - இங்கே, மூன்றனுருபு, அடைமொழிப்பொருளது; மறத்தையுடையவனாய்நின்றானென்க. தந்தம, அ - ஆறனுருபு. புரம்- நகரத்திலுள்ள இடங்களுக்கு இலக்கணை. இரண்டாம் அடியிலுள்ள உற்ற- பெயர். (547) 46.-விஞ்சையர்நிலைகுலைந்துபோனமை. இருவரொருநீணெறி யியங்கலர்தியங்கா வரியுழுவைகண்டுடையு மானினமதேபோல் வெருவியுளநொந்துதிறல் விஞ்சையர்களெல்லாம் பொருவிலளகாபுரி புகுந்தனர்விரைந்தே. |
(இ - ள்.)திறல் விஞ்சையர்கள் எல்லாம் - கொடிய வித்தியாதரர்க ளெல்லாரும்,-வரி உழுவை கண்டு உடையும் மான் இனம் அது ஏ போல் - (உடம்பிற்) கோடுகளையுடையபுலியைப் பார்த்துச் |