லாம் ஒருங்கேஇப்பொழுது பொடியாய் விடும்படி, கரி ரதம்-(தனது) யானையாகியவாகனத்தை, முந்து உந்து - முன்னே செலுத்துவாய்',என - என்று (பாகனைநோக்கிக்)கட்டளையிட்டு,புடை வருகின்ற படையொடு- பக்கத்திலேவருகிற (தனது)சேனையுடனே,சென்று -போய், தெண்டதரன் எதிர்-கதாயுதத்தைத் தரித்துக்கொண்டுள்ள விமசேன னெதிரிலே, மண்டினான்-நெருங்கினான்;(எ - று.) என்று மொழிபலசொற்று என இயையும். மல் குன்றம் என என்பதற்கு-மற்போர்வல்ல மலைபோலஎன்று உரைத்து, மணிமானுக்கு உவமையாக்கொள்ளினு மமையும். (552) 51.-நான்குகவிகள்-மணிமானைச்சார்ந்தவர் மோதுண்ண மணிமானும் மோதுண்டுஉட்குதலைக்கூறும். மண்டியெதிர்வருகின்றபொருநரை வன்புபெறுபுயமுன்பனும் கண்டுமுகிழ்நகைகொண்டுதனதிரு கண்கள்கனலுகநின்றபின் எண்டிசையும்வளைகின்றவிமையவரென்றினொளிதிகழ்குன்றினீர் மொண்டுமுகிலெனவொன்றுபடமிசை மூசியெறிபடைவீசவே. |
இரண்டுகவிகள் -குளகம். (இ - ள்.)மண்டி எதிர் வருகின்ற பொருநரை-நெருங்கி(த் தன்) எதிரிலே போருக்குவருகிற (மணிமான் முதலிய) வீரர்களை,வன்பு பெறு புயம் முன்பன்உம் - வலிமைபெற்றதோள்களையுடையபராக்கிரமசாலியான வீமனும்,-கண்டு-பார்த்து, முகிழ் நகை கொண்டு-(கோபத்தால்) அரும்புகிற புன்சிரிப்பைச் செய்து, தனது இரு கண்கள் கனல் உக - தனது கண்களிரண்டினின்றுங் கோபாக்கினி சொரிய, நின்றபின் - (போருக்கு) நின்றபின், எண்திசைஉம் வளைகின்றஇமையவர்-எட்டுத்திக்குகளிலும் (அவனைச்)சூழ்கிற (வித்தியாதரர்முதலிய) தேவகணத்தவர், என்றின் ஒளி திகழ் குன்றில் நீர் மொண்டு முகில் என - சூரியனைப்போல் ஒளிவிளங்குகிற மகாமேரு மலையின்மீதுநீரைமுகந்து மேகம் (சொரிதல்) போல, ஒன்றுபட மிசை மூசி எறி படை வீச-(யாவரும்) ஒன்றாக அவன்மேல் மொய்த்துக்கொண்டு வீசுதற்குரிய ஆயுதங்களைப் பிரயோகிக்க,-(எ-று.) இக்கவியில் 'வீச'என்பது, மேற்கவியில் 'மிசைவர' என்னும் வினையெச்சத்தைக்கொள்ளும். முன்பன்-திறமையுள்ளவன்:(முன்பு - திறமை.) முன்பன்-முன்னமே அங்குள்ளவ னென்றும், எதிரிலுள்ளவ னென்றுங் கொள்ளலாம். (553) 52. | வீசுபடையொருகோடிவிசைபட வோடிமிசைவரவீமனும் பாசதரனெதிர்நீலமயிலொரு பாகனிகரெனவேகியா ஆசைதொறுமுகில்போலவளைபவராகுமிருபிளவாவுளம் கூசியலமருமாறுதருவளர் கோடுகொடுநனிசாடினான். |
|