பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்359

கழனிகளிலேதங்கப்பெற்ற [மிக்கநீர்வளத்தையுடைய]குருநாட்டையுடைய
யுதிட்டிரன், உயிர்போலும் அனுசனைஎதிர்காணான்-(தனது)உயிரையொத்த
தம்பியான வீமனைஎதிரிற்காணாதவனாய்,தேவியை-(தங்கள்) மனைவியான
திரௌபதியை, வினவுற்றான்-(வீமன் எங்கேயென்று) வினாவினான்;(எ-று.)

     இவண் -இவ்வண்ணம் என்பதன் விகாரம். அநுஜன் - பின்
பிறந்தவன்.  முரல்சங்கம் - வினைத்தொகை.செய் - கழனி; வயலைச்
செய் என்பது, அருவாநட்டார் வழங்குந் திசைச்சொல்.  தலை- ஏழனுருபு.
குளகமாகிய 64, 65 - செய்யுள்கட்கு முடிபுவருமாறு:-(64) அரிமகனும் (65)
இத்தலைஇகல்பொருது இவணின்றானுமானவய வீமன் (64) அடல்
அரிநாதஞ்செய்ய, (65) நாடனதேவியை வினவுற்றான்என்பது.

     இதுமுதற் பதினான்குகவிகள்- முதற்சீரும் மூன்றாஞ்சீரும்
விளச்சீர்களும் மற்றவை மாங்காய்ச்சீர்களு மாகிய அளவடிநான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.                                         (567)

66.வீமன் சென்றுள்ளசெய்தியைத்திரௌபதி
தெரிவித்தல்.

மன்னவன்மொழிகேளா மான்மதர்விழிமானும்
நன்னதிதனிலின்றோர்நறைமலரதுகாணா
இன்னமுமொருகானீ யிம்மலர்கொணர்கென்றேன்
அன்னவன்விசைசென்றானளகைநன்னகரென்றாள்.

     (இ - ள்.)மன்னவன் மொழி கேளா - அந்தயுதிட்டிரராசனது
வார்த்தையைக் கேட்டு, மான் மதர் விழி மான்உம் - மானின்விழி போன்ற
களித்த விழியையுடைய திரௌபதியும், 'நல்நதிதனில் இன்று ஓர் நறை
மலர் அதுகாணா-சிறந்தநதியிலேஇன்றைத்தினத்தில் வாசனையுடையதொரு
பூவை (நான்) பார்த்து, இன்னம்உம் ஒரு கால் நீ இ மலர் கொணர்க
என்றேன்-இன்னுமொருதரம் நீசென்று இவ்வகைப்பூவைக்
கொணர்ந்துகொடுப்பாயாக என்று (நான் வீமனை)வேண்டினேன்;(வேண்ட),
அன்னவன் - அவ்வீமன், அளகை நல் நகர்-சிறந்த அளகாபுரிக்கு, விசை
சென்றான்-வேகமாகப்போனான்,'என்றாள்-என்றுசொன்னாள்;(எ-று.)

    விழிப்பது-விழி;கண்ணுக்குக் காரணப்பெயர்.  மான் என்னுஞ் ெொல்
இரண்டனுள், முன்னது - அதன்நோக்கத்துக்கு முதலாகு பெயர்;பின்னது-
பெண்ணென்னுமாத்திரையாய்நின்றது.  மான்மதர் விழிமான் என்றதைக் கீழ்ப்
புட்பயாத்திரைச்சருக்கத்தின் இறுதிச் செய்யுளில் "மின்புரைமருங்குல் மின்"
என்றதுபோலக் கொள்க.                                    (568)

67.-திரௌபதிவார்த்தையைக் கேட்டதும் புலம்புந்
தருமனைரோமசன் தேற்ற, பின்பு தருமன் சில
கூறலுறுதல்.

மன்றலில்குழலாடன் வாசகமெனுநஞ்சால்
பொன்றினனெனமன்னன் புலம்பியபொழுதன்பால்