பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்385

(தனக்குக்) கொடுத்தஆடைகளைக்கொடுத்து, மதி முத்தம் வெள்குடை
கொடுத்து - பூர்ணசந்திரன் போன்ற வெண்ணிறமான முத்துக்குடையைக்
கொடுத்து, நவ மண கொடுத்து - நவரத்தினங்களையுங்கொடுத்து,
அமரில்என்றுஉம் வென்றிதரு கொற்றம் வெம்படை கொடுத்து-போரில்
எப்பொழுதுஞ்சயத்தைத்தருகிற வலிமையையுடைய பயங்கரமான
சிலஆயுதங்களையுங்கொடுத்து, உயர்பதம் கொடுத்து-சிறந்தபெயரையுங்
கொடுத்து, அனந்தரம்-பின்பு, மிகு பரிவுடன் - மிகுந்த அன்புடனே, விடை
கொடுத்தனன் - (அவனுக்கு மீண்டுசெல்ல) அநுமதியுங் கொடுத்தான்;
(எ-று.)

     'அளகைநாதன்அன்றுதவு'என்பதைத் தொடை, முத்துக்குடை,
நவமணி என்பவற்றிற்குங் கூட்டுக;இவையெல்லாம், கீழ் 101-ஆம்
கவியிற்கூறியபடி குபேரனால்தருமனுக்குக் கொடுக்கப்பட்டனவாம்.
இப்பொருள்கள்யாவும் கடோற்கசன் தனது தேரின் மீது தருமனை
அழைத்துக்கொண்டு போனதுமூலமாக வந்த பொருள்களாதலாலும்,
வனவாசஞ்செய்யுந் தருமனுக்கு இவை வேண்டா வாதலாலும், இவற்றைத்
தருமன் கடோற்கசன் செய்த உதவிக்குஏற்ற பரிசு ஆகக் கொடுத்தான்.                                           (612)

111.-கடோற்கசன்யுதிட்டிராதியரை வணங்கி
இடிம்பவனஞ்சேர்தல்.

வணங்கியன்புடன்மகிழ்ந்துமன்னரை வலம்புரிந்துமனனஞ்
                                        செயா,
நிணங்கமழ்ந்தொழுகிவழியவாளெயிறு நிலவெழும்புகை
                               கொள்வாயினான்,
துணங்கைகொண்டலகைகோடிவானின்மிசைதுள்ளியூரு
                               மிரதத்தின்மேல்,
இணங்கிமீளவும்விநாழிகைப்பொழுதினில்லிடிம்பவன
                                  மெய்தினான்.

     (இ-ள்.)நிணம் கமழ்ந்து ஒழுகி வழிய -(தின்னப்படுந்)
தசையின்நாற்றம்வீசிச் சிந்திப்பெருக, வாள் எயிறு நிலவு எழும்-கூர்மையான
கோரதந்தங்களினின்றும் நிலாப்போன்ற வெள்ளொளி விளங்கப்பெற்ற, புகை
கொள் வாயினான்-(கோபாவேசத்தாற்)புகையைக் கொண்ட வாயையுடைய
அக்கடோற்கசன்,-அன்புடன் - பக்தியுடனே, மகிழ்ந்து - மகிழ்ச்சியுற்று,
மன்னரை-(யுதிட்டிரன்முதலிய பாண்டவ) அரசர்களை,வணங்கி -
நமஸ்கரித்து, வலம் புரிந்து - பிரதக்ஷிணஞ் செய்து, மனனம் செயா -
தியானித்து, அலகை கோடி துணங்கை கொண்டு துள்ளி வானின் மிசை
ஊரும் இரதத்தின்மேல் இணங்கி - அநேகம்பேய்கள் துணங்கை
யென்னுங்கூத்தையாடிக் கொண்டு (உற்சாகத்தால்) துள்ளிக்கொண்டு
ஆகாசமார்க்கத்திலே சுமந்துசெல்லப்பெற்ற (தனது) தேரின்மேற் பொருந்தி,
மீளஉம்-மறுபடியும், விநாழிகை பொழுதினில் - ஒருவிநாடிப்பொழுதிலே,
இடிம்பவனம் எய்தினான்- (தனதுவாஸஸ்தாநமான) இடிம்பாரணியத்தை
யடைந்தான்;(எ - று.)

    துணங்கைக்கூத்தாவது-இரண்டு கைகளையும்முடக்கி
விலாப்புறத்திலேயொற்றி ஆடுவது;"முடக்கியவிருகைபழுப்புடை