பக்கம் எண் :

390பாரதம்ஆரணிய பருவம்

ஐயோ!  ஐயோ!இதற்கு-இவ்வாறு இவன்வந்ததற்கு, இன்று-இப்போது, என்
செய்வேம் -(நான்சொல்லுவது தவிர வேறுஉபாயம்) என்ன
செய்யவல்லோம்?  (இங்ஙனம் ஏவிய துரியோதனாதியர்க்கு),நாம்-,ஆம்-
பொருந்திய, மாறுஆக-பகையாக, எழுந்து-புறப்பட்டு, சென்று-போய்,-கோ
ஆனவன்உம்-ராஜராஜனானஅத்துரியோதனனும், பல படைஉம்-
(அவனுடைய) பலசேனைகளும்,குன்ற-ஒழிந்து போம்படி, பொருது-
போர்செய்து, இமைப்பில் - இமைப்பொழுதிற்குள், சாவா நிற்பது-
(நம்முயிரும்) மாயநிற்பது, இனி - இப்போது, உறுதி-(நாம்) செய்யத்தக்க
சிறந்தசெயல்,'என்றான்- என்று தன் கருத்தைத் தெரிவித்தான்;(எ-று.)

    கொடியமுயற்சியில் எப்போதுங் கருத்துச்செல்பவனாதலால்,வீமன்
அதற்குஏற்ப, நம்மீது இம்முனிவனைஏவிய நம்பகைவரைப் பழிவாங்குமாறு
கொன்றுவிட்டு நாமும் உயிர்மாய்வதே செய்யத் தக்க செயலென்றான்:
நீராடிவந்த முனிவனுக்கு உணவளிக்காவிட்டால் அவன் சாபத்திற்கு
இலக்காய்ச் சாகவேண்டிவருமாதலால், பகை முடித்து இறந்திடுவோ
மென்றானென்க. ஆஆ - இரக்கக் குறிப்பிடைச்சொல்.  சமீரணி-
வாயுபுத்திரன்:சமீரணன்-வாயு.                              (619)

6.-விசயன்வீமனதுபேச்சை ஆட்சேபிக்க,
நகுலன் க்ருஷ்ணனைவிரைந்துவரவழைக்குமாறு சொல்லல்.

சுருதிக்கடவுளனையானைச்சுனைநீர்படிந்துவரச்சொல்லிக்
கருதிப்பிறநாம்புரியுமது கடனோவென்றான்கழல்விசயன்
மருதிற்கிடைபோமவன்விரைந்துவருமாறழைமினெனமொழிந்தான்
ஒருதிக்கினும்வெம்பரியேற்றுக் கொத்தோரில்லாவுரவோனே.

     (இ - ள்.)கழல் விசயன் - வீரக்கழலையணிந்தஅருச்சுனன், 'சுருதி
கடவுள் அனையானை- வேதத்தினாற்புகழப்படுகிற கடவுள் போலப்
பெருமைவாய்ந்த துருவாசமுனிவனை,சுனைநீர் படிந்து வர சொல்லி-
சுனைநீரிலேநீராடிஉண்ணுதற்கு வரும்படி சொல்லிவிட்டு, நாம்-, பிற கருதி
- (மனத்தில்) வேறாகஎண்ணமிட்டு, புரியுமது-செய்யுஞ் செயல், கடன்ஓ-
முறைமையானது ஆகுமோ?'என்றான்-என்றுகூறினான்:(பின்பு), ஒரு
திக்கின்உம் - ஒரு திக்கிலும், வெம்பரி ஏற்றுக்கு-வேகமுள்ள
குதிரையிலேறிச் சவாரி செய்வதற்கு, ஒத்தோர் இல்லா-
தன்னோடொத்தவரைப்பெறாத,உரவோன் - மனவலிமையுடைய நகுலன்,-
'மருதிற்குஇடை போம் அவன் - இரட்டை மருதமரங்களினிடையேசென்ற
ஸ்ரீக்ருஷ்ணனை,விரைந்துவரும் ஆறு - (இங்கே) விரைந்துவரும்படி,
அழைமின்-அழையுங்கள்',என மொழிந்தான்-என்று
(அப்போதுநேரஇருக்கும் ஆபத்தினின்று தப்புவதற்குஉபாயங்) கூறினான்;
(எ- று.)

     கோவானவனும்பலபடையும் குன்றச்சென்றுபொருது
இமைப்பிற்சாவாநிற்பது உறுதி என்று கூறிய வீமசேனன்பேச்சை
அருச்சுனன்முறைமையன்றேஎன்று ஆட்சேபிக்க, நகுலன் ஸ்ரீக்ருஷ்ணனை
அழைத்துவந்தால்நமக்கு நிகழக்கடவ இடரனைத்துந்தீருமாதலால்