பக்கம் எண் :

துருவாசமுனிச்சருக்கம்391

அவனைவிரைவில்வர வழையுங்களென்றான். ஒத்தோரில்லா எனவே,
மிக்கோரில்லாமைபெறப்படும்.  சாபத்தினால்இரட்டைமருதமாகிக் கிடந்த
குபேரபுத்திரர்களின் சாபத்தை நீக்க ஸ்ரீக்ருஷ்ணன் அவற்றினிடையே
தவழ்ந்தானென்க.                                        (620)

7.-சகதேவன் கூறியஉபாயச்சொல்.

யாதேயாகவிந்தவிபத் தேகம்பொழுதைக்கிசையளிகள்
தேதேயென்னும்பசுந்துளபத் திருமாறன்னைச்சிந்தியுமிப்
போதேவருமிங்கவன்வந்தாற் போமிக்கவலையெனப்புகன்றான்
சாதேவனுமங்கவனிசைத்த சொல்லுக்கிசைந்தான்றருமனுமே.

     (இ - ள்.)சாதேவன்உம்-, 'இந்தவிபத்து-இப்போது(நமக்கு) வரக்கடவ
ஆபத்து, யாதுஏ ஆக - எதுவாகவிருந்தாலும் இருக்கட்டும்:ஏகும்
பொழுதைக்கு - (இது) செல்லும் போதுக்கு [நீங்கவேண்டமேயானால்
என்றபடி],இசை அளிகள்-பாடல்பாடும் வண்டுகள், தே தேஎன்னும்-
தேதேஎன்று ஒலிக்கின்ற, பசுந் துளபம்-பசிய திருத்துழாயையணிந்த,
திருமால் தன்னை- திருமாலினவதாரமாகிய க்ருஷ்ணனை,சிந்தியும் -
தியானியுங்கள்:(சிந்தித்தால்), அவன் இங்கு இப்போதுஏ வரும் -
அத்திருமால் இவ்விடத்து இப்போதே வருவான்:வந்தால்-(அங்ஙன்)
வருவானாயின்,இ கவலைபோம்-இந்தக்கவலைநீங்கும்,'என - என்று,
புகன்றான்- (தன் ஆலோசனையைக்)கூறினான்:தருமன்உம் -
தருமபுத்திரனும், அங்கு-அப்போது, அவன் - அந்தச் சகதேவன், இசைத்த
- சொன்ன, சொல்லுக்கு-, இசைந்தான் - உடன்பட்டான்;(எ - று.)

     நகுலன்ஸ்ரீக்ருஷ்ணனைவிரைந்துவருமாறு அழையுங்களென்று
சொல்ல, சகதேவன் 'அவ்வமலன்நினைத்தமாத்திரத்தில்இங்குவந்திடுவான்:
வந்திட்டானாயின்,எதுவாயிருந்தாலும்விபத்து 'நீங்கும்என்றனனென்பதாம்.
நடந்து செல்லும்போது மார்பின்மாலைசலிக்குமாதலால், அப்போது
மாலையில்மொய்த்திருக்கும் வண்டுகள் எழுந்து தேதேயென்று
ஆளத்திவைக்கு மென்க.                                  (621)

8.-திரௌபதி'முனிவன்வந்திடுவானே:என்செய்வது?'
என்றுநடுங்கிநிற்றல்.

என்னேயென்னேயாதவன்வானிடையுங்கடந்தான்முனிவன்வரும்
முன்னேநுகர்ந்தாஞ்சாகபல மூலம்பலபேர்முனிவரொடும்
கொன்னேமுனியுமுனிக்கினியென் கொல்லோபுரிவதெனநின்ற
மின்னேரிடையாணடுநடுங்கிவிளைவதென்னோவெனப்பயந்தாள்.

     (இ-ள்.)நின்ற மின் நேர் இடையாள் - நிலைத்துநிற்பதொரு
மின்னலுக்கு உவமையான இடையையுடைய திரௌபதி,-'ஆதவன் -
சூரியன், வான் இடைஉம் கடந்தான் - ஆகாயத்தின்நடு விடத்தையுங்
கடந்திட்டான்:[உச்சிப்போதும்கழிந்திட்டதென்றபடி]:முனிவன் வரும்
முன்னே - இந்தத் துருவாசமுனிவன் (நம்மிடத்துக்கு) வருவதற்குமுன்னமே,
பல பேர் முனிவரொடுஉம் - பல