பக்கம் எண் :

424பாரதம்ஆரணிய பருவம்

களைத்துரியோதனன்எண்ணப்படி பூதத்தால் அழிந்திடாதவாறுயமதருமன்
தப்பச்செய்தலைமேலே காண்க.

     யமதருமராஜனும்உலகிலுள்ளாரை அவரவர்கள்செய்த தீவினைக்
கேற்பப் பட்சபாதமில்லாமல் தண்டித்துத் தருமத்தை நிலைநாட்டுபவ
னாதலால்,அக்கடவுளை'மும்மைப்புவனங்களுங்காக்கும்தப்பாவாய்மை
யறக்கடவுள்'என்றாரென்னலாம். முதலிரண்டடிகள்-கவிக்கூற்று.
உரைப்பாம் - கவிகட்குஉரிய தனித்தன்மைப்பன்மை.

     ஓமம்=ஹோமம்:அக்கினியில் அவிசுசொரிதலையுடையவேள்விக்கு,
ஆகுபெயர். எழுப்ப-செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்: 'எழு'
என்பதன் பிறவினையான 'எழுப்பு' - பகுதிவனசரிதர் என்ற வடசொற்றொடர்
- காட்டிற்சஞ்சரித்தலையுடையவர் எனக் காரணப்பொருள்படும். ஐவர் -
தொகைக்குறிப்பு. வனசரிதர்ஐவர் - வனசரிதராகிய ஐவர் என
இருபெயரொட்டுப் பண்புத்தொகை.  அறம் பொருள் இன்பம் என்ற மூன்றும்
'முப்பால்'எனப்படும்.  மும்மைப் புவனம் என்றவிடத்து, மும்மையென்பது -
எண்ணின் தன்மையைக் காட்டாமல் "தெரிமாண்டமிழ்மும்மைத்தென்னம்
பொருப்பன்" என்றஇடத்துப்போல எண்ணின்மேல் நின்றது.
தீவினைசெய்வோர்களைத்தண்டித்துத் தருமத்தை நிலைநாட்டுதலால்,
யமதருமராஜன் 'அறக்கடவுள்'எனப்படுவான். அறிந்தான்-முற்றெச்சம்.

    இதுமுதல்ஆறுகவிகள் - பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்க்ளுமாகிவந்த கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.                    (670)

17.-பாண்டவரிருக்கும் வனத்தில் பார்ப்பனச்சிறுவனது
மான்தோலைஒருமான் எடுத்துச்செல்லுதல்.

தன்மைந்தனுமத்தம்பியருஞ் சரியாநின்றதபோவனத்து,
நன்மைந்தரிலோர்முனிமைந்தனன்னூலுடன்பூணசினத்தை,
வின்மைந்தரையுமதியாமல் விரைந்துள்புகுந்துவிசைத்தகல்வான்,
தொன்மைந்தனைப்போலோருழைகொண்டோடிற்றென்னாற்
                                   சொலவுண்டோா

     (இ - ள்.)தன் மைந்தன்உம்-தனது புத்திரனாகியயுதிஷ்டிரனும், அ
தம்பியர்உம்-(வீமன் அருச்சுனன் நகுலன் சகதேவன் என்ற அவனுடைய)
அந்தத் தம்பிமார்களும், சரியாநின்ற சஞ்சரித்துக்கொண்டிருக்கிற,
தபோவனத்து - (அந்தத்) தபோவனத்துள் (வாழ்கின்ற), நல் மைந்தரில்-
அழகியமைந்தர்களுக்குள், ஓர்முனிமைந்தன் ஒரு ரிஷிகுமாரன், நல்
நூலுடன்-(தனது) அழகிய பூணூலுடனே, பூண்-தரித்துக்கொண்டிருந்த,
அசினத்தை-மான்தோலை,ஓர் உழை-ஒருமானானது,வில் மைந்தரைஉம்-
வில்வீரராகிய பஞ்சபாண்டவரையும், மதியாமல்-இலட்சியஞ் செய்யாமல்,
விரைந்து உள்புகுந்து - வேகமான உள்ளேசென்று, கொண்டு-
கவர்ந்துகொண்டு, அகல் வான் தொல்மைந்தனைபோல்.