துன்புஉறாது- வருத்தமடையாமல், இரும் - இனிதிருப்பீர்,'என - என்று, சொல்லி - (வாழ்த்துச்சொல்லைக்)கூறிவிட்டு, அன்பினால்அருள் புரிந்து - அன்புடனே கருணைசெய்து,ஏகினான்- சென்றிட்டான்:(யாவனெனில்),- அரியதாதை-(யுதிஷ்டிரனுடைய) அருமையான தந்தையாகிய யம தருமராசன்;(எ-று.) நல்லபாம்புஎன்பதுபோல 'நல்வனம்'என்றார். தேவமானத்தால் 'நாள்'என்றது. அகன்றது என்று பிரதிபேதம். (721) 68.-தருமன்முதலியோர் யமனைவணங்கித்தம் வனத்தை யடைதல். தம்பியரனைவருந்தத்தமாவிபெற்று உம்பரிற்றலைவனாமுரியதந்தையை வம்பவிழ்மலரடி வணங்கிநெஞ்சுடன் அம்பகமலர்ந்துதம் மடவியெய்தினார். |
(இ-ள்.)தம்பியர் அனைவர்உம்-தம்பிமார்கள் எல்லோரும், தம்தம் - தங்கள் தங்களுடைய, ஆவி பெற்று - உயிரையடைந்து, உம்பரில் தலைவன் ஆம் -தேவர்களில் தலைமைபெற்றவனாகிய,உரிய தந்தையை - உரிமைபெற்றதந்தையாகி யமதருமனை,வம்பு அவிழ் மலர்அடி - நறுமணம்வீசுகின்ற தாமரை மலரைப்போன்ற பாதங்களில், வணங்கி - நமஸ்கரித்து, (மகிழ்ச்சியினால்),நெஞ்சுடன்-மனத்துடன், அம்பகம் - கண்களும், மலர்ந்து - மலரப்பெற்று, தம் அடவி - தமக்குரிய காட்டை, எய்தினார்- அடைந்தார்கள்;(எ-று.) அனைவரும்ஆவிபெற்று, வணங்கி, மலர்ந்து, அடவி எய்தினார் என்க. பிராணனைத்தந்தவனும் ஒரு தந்தையாவனாதலாலும்,யமதருமன் போனஉயிரைத்தந்தவ னாதலாலும்,அவனை'உரியதந்தை'என்றா ரென்னலாம். (722) 69.-பாண்டவர்திரௌபதியினிடம் நிகழ்ந்தன கூறுதல். தீதறக்கானிடைச் செறிந்தவைவரும் பேதுறத்தொடர்ந்தொரு பிணைபின்போனதும் ஏதமுற்றிறந்தது மெழுந்துமீண்டதும் ஆழ்துயர்த்திரௌபதிக் கறியக்கூறினார். |
(இ-ள்.) தீதுஅற-(வந்த) தீமைநீங்கிவிட, கானிடை - காட்டிலே, செறிந்த - நெருங்கிச்சேர்ந்த, ஐவர்உம்-பஞ்சபாண்டவர்கள்,-பேதுஉற- மனக்கலக்கமுண்டாக, ஒருபிணை- ஒரு பெண்மானை,பின் தொடர்ந்து போனதுஉம்-,-ஏதம்உற்று - (அலைச்சலால்இளைப்பும் பெருந்தாகமெடுத்தலுமாகிய) பொல்லாங்கையடைந்து, இறந்ததுஉம் - (சுனை நீரைப்பருகி) உயிரொழிந்ததையும், எழுந்து மீண்டதுஉம்-(யமதருமராசனால் உயிர்பெற்று) எழுந்து மீண்டுவந்த செய்தியையும்,-ஆழ்துயர்-(சென்றவர்கள் இன்னும் வரவில்லையே |