(இ-ள்.)வரை அரசன் திருமடந்தை - பார்வதி, வனம் முலைமேல்- (தனது)அழகிய தனங்களின்மேல், மணி குன்றி வடம்உம்- குன்றிமணிகளைக்கோத்தஆரமும்,செம் கை - சிவந்த கைகளில், நிரை வளைஉம்- வரிசையான வளையல்களும்,புலி பல்லால் நிறம் திகழ் மங்கலம் பூண்உம் - புலியினது பல்லைக்கோத்ததனால்ஒளி விளங்குகின்ற மங்கலநாணும், நீலம் மேனி - (தனது)நீலநிறமாகிய திருமேனியில், விரை அகிலின் நறுசாந்துஉம்-வாசனையையுடையஅகிற்கட்டையின் தேய்வினாலாகியவாசனைவீசுகின்ற பூச்சும், தழை விரித்த பூ துகில்உம் - மரத்தின் தழைகளைப்பரப்பினதாலாகியஅழகியசேலையும்(பொருந்த), வேடமாதர் நிரைநிரைஏ தனைசூழ - வேடப்பெண்கள் கூட்டங்கூட்டமாகத் தன்னைச்சுற்றி நிற்கும்படி, நின்ற-(தான்)வேட்டுவிச்சிவடிவமெடுத்துநின்ற, வடிவு அழகினுக்கு-திருமேனியின் அழகுக்கு, வேறுநிகர்உண்டுஓ - வேறு ஒப்புஉளதோ? (எ-று.)-மங்கலப்பூண்- மங்கலத்துக்கு அடையாளமான ஆபரணம். இதுமுதல்ஆறுகவிகள்-இச்சருக்கத்து 43-ஆங்கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள். (86) 87.-சிவபெருமான்பிரமதகணங்கள் சூழ்ந்துவர மனைவியோடும்புறப்பட்டுச் செல்லுதல். ஓரேனந்தனைத்தேடவொளித்தருளுமிருபாதத் தொருவனந்தப், போரேனந்தனைத்தேடிக்கணங்களுடன் புறப்பட்டான் புனங்களெல் லாஞ், சீரேனல் விளைகிரிக்குத்தேவதையாங் குழவியையுஞ் செங் கையேந்திப், பாரேனையுலகனைத்தும்பணிவுடனே புகழ்ந்திடத்தன் பதிப்பின்வந்தாள். |
(இ-ள்.)ஓர் ஏனம்-ஒருபன்றி, தனைதேட-தன்னைத்தேடிநிற்க, ஒளித்தருளும்-(அதற்குக்காணவொண்ணாதபடி)மறைத்தருளிய, இரு பாதத்து-இரண்டு திருவடிகளையுடைய,ஒருவன் - ஒப்பற்ற பரமசிவன்,- அந்த போர்ஏனந்தனைதேடி - (அருச்சுனனோடு)போர்செய்தற்கு வருகிற மூகாசுரனாகியஅந்தப்பன்றியைத் தேடிக்கொண்டு, கணங்களுடன்- (வேடவடிவங்கொண்ட)பிரமத கணங்களுடனே, புறப்பட்டான்- (வேட்டைக்குப்)பிரயாணமானார்;(உமாதேவியும்),புனங்கள் எல்லாம்- கொல்லைகளிலெல்லாம்,சீர் ஏனல்-சிறந்த தினைப்பயிர்,விளை- விளையப்பெற்ற,கிரிக்கு-மலைக்குஉரிய, தேவதை ஆம்-தெய்வமாகிய, குழவியைஉம்-(சுப்பரமணியக்கடவுளாகிய)குழந்தையையும், செம் கை ஏந்தி-சிவந்த கையிலே எடுத்துக்கொண்டு, பார் - பூமியிலுள்ளவர்களும், ஏனைஉலகு அனைத்துஉம்-மற்றஉலகங்களெல்லாவற்றிலு முள்ளவர்களும், பணிவுடனே-வணக்கத்தோடு, புகழ்ந்திட-துதிக்குமாறு, தன் பதிப்பின்-தனது கணவனுக்குப் பின்னே, வந்தாள்-;(எ-று.) முன்பு ஒருபன்றியினால் தேடிக் காணமுடியாமற்போன பாதங்களையுடைய ஒருவர், இப்பொழுதுஒருபன்றியைக் காணும் |