பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்83

105.கொண்டுதவமேதனமெனப்புரியும்வில்லிமெய்குலைந்தய
                           ருகின்றநிலையைக்,
கண்டருகுநின்றவிமவான்மகளுரைக்கமிகுகருணை
                         யொடிரங்கியவனைப்,
பண்டுதவமேபுரியிளைப்பற மனத்தின்மிகுபரி
                        வுடையனாகிவெகுளா,
எண்டிசையும்வென்றனலளித்தசிலை நாணியற
                   வெயினர்பதியெய்தனனரோ.

     (இ-ள்.)தவம்ஏ-தவத்தையே, தனம் என-செல்வமென்று, கொண்டு-
மேற்கொண்டு, புரியும்-செய்கின்ற, வில்லி - விற்போரில் வல்ல அருச்சுனன்,
மெய் குலைந்து - (இவ்வாறு)உடம்புநடுங்கி, அயருகின்ற - தளர்கின்ற,
நிலையை-தன்மையை, கண்டு-பார்த்து, அருகு நின்ற இமவான் மகள்
உரைக்க - (தனது)பக்கத்திலே நின்ற இமயகிரியினது குமாரியாகிய பார்வதி
சொல்ல, எயினர் பதி-வேடர்தலைவன், மிகு கருணையொடு - மிகுந்த
அருளுடனே, அவனை-அவ்வருச்சுனன்திறத்தில், இரங்கி-
திருவுள்ளங்கனிந்து,-பண்டு தவம்ஏ புரி இளைப்பு அற (இப்போருக்கு)
முன்னே தவத்தைச் செய்ததனாலுண்டாகிய (அவனது)இளைப்பு நீங்கும்படி,
மனத்தில் மிகு பரிவு உடையன் ஆகி-(தனது)உள்ளத்தில் மிகுந்த
அன்புடையவனாய், வெகுளா - (வெளிக்குக்)கோபித்து, எண்திசைஉம்
வென்று-எட்டுத்திக்குக்களிலுள்ளாரையும் ஜயிக்கும்படி, அனல் அளித்த-
அக்கினிதேவனாற் கொடுக்கப்பட்ட, சிலை-(காண்டீவமென்னும்)வில்லினது,
நாணி-நாண், அற - அறும்படி, எய்தனன்-அம்பெய்தான்;(எ-று.)

     தவஞ்செய்யும் முனிவர்க்கு 'தபோதனர்'என்று பெயரிருத்தலால்
'தவமேதனமெனப்புரியும்வில்லி'என்றார்.  அரோ-ஈற்றசை.  வென்று-
எச்சத்திரிபு.                                              (105)

106.-அருச்சுனன்விற்கழுந்தினாற் சிவபிரானது சிரசில்
மோத, அப்பிரான் அவசமாதல்.

உழுந்துருளுமெல்லைதனில்வில்லினெடுநாணற வுரத்தொடெதி
                                    ரோடிவடிவிற்,
கழுந்துகொடுமாமுடியின்மோதுமு னிழந்ததுயர்
                             கண்ணிபடுபீலிமதியின்,
கொழுந்தமுதுசோரவிடநாகர் சுடிகைத்தலைகுலைந்து
                                 மணிசிந்தநதியாள்,
எழுந்துதடுமாறியகல்வானிலுறவேடனுமிளைத்தவசமுற்றனனரோ.

     (இ-ள்.)உழுந்து உருளும் எல்லை தனில் - ஒரு உழுந்து என்கிற சிறு
தானியம் ஒருமுறை உருளுங்காலத்தினளவில் [மிகவிரைவில் என்றவாறு],
வில்லின் நெடு நாண் - (தனது)வில்லினது நீண்ட நாணி, அற -
(சிவவேடனதுஅம்பினால்)அற்றுப் போக, - (அருச்சுனன்),உரத்தொடு -
வலிமையுடனே, எதிர் - அவ்வேடனெதிரே, ஓடி - விரைந்துசென்று, வரி
வில் கழுந்துகொடு - கட்டமைந்த (தனது)வில்லினது தண்டத்தால், மா
முடியில் - (அவ்வேடனது)சிறந்த சிரசிலே, மோதும்முன் - தாக்குதற்கு
முன்னே, உயர் கண்ணி படு பீலி - சிறந்த தலையின்மாலையாகப்
பொருந்திய மயிலிறகு, இழந்தது - (முடியைவிட்டு)நீங்கினதாக