பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்99

     (இ-ள்.)விசயன்உம்-அருச்சுனனும், பெற்றனன்-(அவற்றையெல்லாம்)
பெற்றுக்கொண்டான்;(அதன்பின்பு),கற்றை அம் சடையவன்-
தொகுதியாகிய அழகிய சடையையுடைய பரமசிவன், சுற்றிய-(தம்மைச்)
சுற்றிலுமுள்ள, பேய்உம்-பேய்களும், பூதம்உம்-பூதங்களும், கணங்கள்உம்-
மற்றைப் பிரமத கணங்களும், சுருதி ஓசைஉம்-வேதங்களின் கோஷமும்,
வெற்றி கொள்பெற்றம்உம்-மேன்மையைக் கொண்ட நந்தியும், விழைந்து
சூழ-விரும்பிச் சூழ்ந்துவராநிற்க, கயிலைஏகினான்-கைலாசத்துக்குச்
சென்றருளினார்;(எ-று.)

     ஆனினத்தின் ஆணையும்பெண்ணையும்உணர்த்தும் பெற்றம்
என்பது - தென்பாண்டிநாட்டினின்று தமிழில் வந்து வழங்கிய
திசைச்சொல்லாம்.  காலத்திற் சிவபிரானுக்கு வாகனமான ருஷபமாதல்பற்றி,
நந்திதேவரை 'பெற்றம்'என்றார். ஈற்றடியில், கற்றவருடையவன் என்றும்
பாடம்.                                                (130)

131.-இதுமுதல்,மூன்றுகவிகள் - ஒருதொடர்:
தேவேந்திரன்வானத்தினின்று வந்து அருச்சுனனை
வாழ்த்தித்தன்தேரின்மேற் கொண்டு வானுலகத்து
அழைத்துப்போதலைக்கூறும்.

ஏகியபின்னரா யிரங்கணாதனும்
மோகரதுந்துபி  முழங்கத்தேரின்மேல்
நாகருமுனிவரு நண்ணிவாழ்த்தவே
வாகைகொள்விசயனைவந்துபுல்லியே.

     (இ-ள்.)ஏகிய பின்னர் - (சிவன்)சென்றபின்பு, ஆயிரம்கண்
நாதன்உம் - ஆயிரங் கண்களுடைய (தேவர்)தலைவனானஇந்திரனும்
மோகரம் துந்துபி முழங்க - பேரொலியைச் செய்கின்ற துந்துபி யென்னும்
வாத்தியங்கள் ஒலிக்கவும், நாகர்உம் முனிவர் உம் நண்ணி வாழ்த்த-
தேவர்களும் முனிவர்களும் நெருங்கி வாழ்த்துச் சொல்லாநிற்கவும்,
தேரின்மேல் வந்து - (தனது)தேரில் ஏறிவந்து, வாகை கொள் விசயனை
வெற்றியைக்கொண்ட அருச்சுனனை,புல்லி - தழுவிக்கொண்டு,- (எ- று.) -
மேல் 133 -ஆங் கவியில் 'ஏற்றி'என்பதனோடுஇயையும்.  132 -
ஆங்கவி, இடைப் பிறவரல்.

     வாகை யென்னும்மரத்தின் பெயர் - அதன் பூவினாலாகியமாலையை
இருமடியாகுபெயராற் குறித்துப் பின்பு இலக்கணையால்,
அம்மாலையையடையாளமாகச்சூடுகிற வெற்றியை யுணர்த்திற்று. துந்துபி -
ஒருபறை.                                             (131)

132.நீபுரிதவப்பய னீடுவாழியே
சாபமுந்தூணியுஞ்சரமும்வாழியே
தீபமெய்யொளியுடன்சேர்ந்துபோர்செயும்
மாபெருநீலமெய்வாழிவாழியே.