எதிரிற் சமீபித்தான், (பின்பு), இருவர்உம், இந்த இரண்டுபேரும் சிவன் வளைத்த பொன் மலையின்உம் வலியின் சிலை வளைத்தனர்-சிவபிரான் (முன்பு ஒருகால் வில்லாக) வணக்கிய பொன்மயமான மகாமேருகிரியினும் வலிமையையுடைய (தம்) வில்லை வளைத்துப் பொருதார்கள்: (அச்சமயத்தில்), படு களம்முழுவதும்-அப்போர்க்களம் முழுவதும், எறிதரு பவனன்-வீசுகிற காற்று, மை கடல் வடவையை முனிதரு-கரியகடலிலுள்ள படபாமுகாக்கினியைச் சினந்து எழுப்புகிற, பவனம்-காற்றை, ஒத்தது-; (எ - று.) தன்னைநோக்கி அபிமன் கூறியவாறே இலக்கணன் தான் அவனைநோக்கிக் கூறினா னென்பதை, 'எதிரொலியென'என்ற உவமையால் விளக்கினார், பவநம்- வடசொல். ஏறிதருபவனன் மைக்கடல்வடவையை முனிதரு பவன மொத்தது- போர்க்களம் மிகக் குழப்பமடைந்தது என்றவாறாம். எரிகிற நெருப்பைக் காற்று மிகுவித்த வியல்பு. பவநம்-இடத்தையென்று கூறுவாருமுளர். பி - ம்: வடவையின். முனிதருபருவம். (226) 89. | துரகதத்துடல்கெழுமினசிலகணைதுவசமற்றிடவிரவினசில கணையிருவர் நெற்றியுமெழுதினசிலைகணையிருபுயத்திடைசொருகின சிலகணை யரணியொத்தெரிகதுவினசிலகணையகன் முகட்டையு முருவினசிலகணை, முரணிலக்கணகுமரனுமபிமனு முடிகியிப்படி முரணமர்புரியவே |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.) (இருவரும் ஒருவர்மேல்ஒருவர் எதிர்த்து எய்த அம்புகளுள்), சில கணை-சிலஅம்புகள், துரகதத்து உடல்-(எதிரியின்) தேர்க்குதிரைகளின் உடம்பில், கெழுமின-நிறைந்தன; சிலகணை-, துவசம் அற்றிட - கொடிஅறும்படி, விரவின - கலந்தன; சிலகணை-, இருவர் நெற்றிஉம்-இரண்டுபேரது நெற்றியிலும், எழுதின- பதிந்தன; சிலகணை,- இரு புயத்திடை இரண்டு தோள்களிலும், சொருகின - தைத்தன;சிலகணை-, அரணி ஒத்து அரணிக்கட்டைபோன்று, எரி கதுவின-தீயை உண்டாக்கின, சிலகணை-, அகல் முகட்டைஉம்-பரந்த ஆகாயத்தின் மேலிடத்தையும், உருவின-ஊடுருவிச்சென்றன; முரண்- வலிமையையுடைய, இலக்கணகுமாரனும் அபிமனும்-, முடுகி-முனைந்து, இ படி-இவ்வாறு, முரண் அமர் புரிய-கொடும்போரைச்செய்ய,-(எ - று.) -"கணை ***முழுகின' என அடுத்தகவியோடு முடியும்; இனி, இச்செய்யுளைக் குளகமாக்காமல் 'அமர்புரிய'என்பதை, 'கெழுமின' என்பது முதலியவற்றோடு முடித்தலும் ஒன்று. அரணி - தீக்கடைகோல். 90. | மழைமு கிற்குல நிகர்திரு வடிவினன் மருகன் முட்டியு நிலையுமெய் வலிமையு, மழகு றத்தொடு கணைகுரு பதிமக னவயவத்தினி லடைவுற முழுகின, கழல்க ளற்றன விருதொடை நழுவின கவச மற்றது கரமலர்புயமுடன், முழுதுமற்றன வொளிவிடுநவமணி முகுட மற்றது முகிழ்நகை முகனொடே. |
(இ-ள்.) மழை - மழையைப்பொழிகிற, முகில்-காளமேகத்தின், குலம்-இனத்தை, நிகர்-ஒத்த, திருவடிவினன்-(கரிய) |