| சிந்துபூபதிசெயத்திரதன்வெஞ்சினமுற வந்துவெங்குசிலைவாளியிற்றகையவே. |
இதுவும், வருங் கவியும் - குளகம். (இ-ள்.) முந்து - சிறந்த, வாள் - ஆயுதப்பயிற்சியையுடைய, அபிமன்-, மூரி வில் -வலியவில்லையுடைய, அ குமரனை- அவ்விலக்கணனை, உந்து தேர்மீது கொண்டு- செலுத்தப்படுகிற (தனது) தேரின்மேற் பிடித்து வைத்துக்கொண்டு, ஓடலும் -வேகமாகச் செல்லுமளவில்-, - ஒரு புடை - ஒரு பக்கத்திலிருந்து, சிந்து பூபதிசெயத்திரதன் - சிந்துதேசத்தரசனான ஜயத்ரதனென்பவன், வெம் சினம் உற - கடுங்கோபமுண்டாக, வந்து- (எதிரில்) வந்து, வெம் குனி சிலை வாளியின் - கொடிய வளைந்தவில்லினின்று (எய்யப்படும்) அம்புகளால், தகைய - தடுத்துபோர்செய்ய,- (எ - று) -" மன்னவன் றோளுரந் தொலைந்தபின்... தேர்ம(ன்)னர்,.... அமர் செய்தார்" என அடுத்த கவியில் தொடர்ந்து முடியும். முதலில் அபிமனது வில்லைத் தன்வில்வலியால் துணித்திட்டனனாதலால், 'மூரிவிற்குமரன்' எனப்பட்டான். வாள் - ஆயுதப் பொதுப்பெயராய் நின்றது. ஜயத்ரதன் - துரியோதனாதியருடன் பிறந்தவளான துச்சளையின் கணவன்; சிந்துதேசத்தரச னாதலால், ஸைந்தவனென்றும் இவனுக்கு ஒரு பெயர் வழங்கும்.பி- ம்: வன் செயமுற. (24) 25.- சயத்திரன் வலிதொலைய, பிறகு கர்ணன் முதலியபலர் அபிமனொருவனை வளைதல். மடங்கலைவளைவதோர்சிலம்பிநூல்வலையெனத் தொடங்கியமன்னவன்றோளுரந்தொலைந்தபின் திடங்கொடோளங்கர்கோன்முதலியதேர்மன ரடங்கவந்தபிமனாமொருவனோடமர்செய்தார். |
(இ-ள்.) மடங்கலை - ஆண்சிங்கத்தை, வளைவது - சூழந்து அகப்படுத்துவதான, ஓர் - ஒரு, சிலம்பி நூல் வலை என - சிலந்தி யென்னும் பூச்சியின் நூலினாலாகிய வலைபோல, தொடங்கிய -(அபிமனை வளைந்துகொள்ளத்) தொடங்கின, மன்னவன் - சயத்திரதராசன், தோள் உரம் தொலைந்த பின் - (அவ்வபிமனாயுதங்களால் தன்)தோள்வலிமை அழிந்த பின்பு, - திடம் கொள் வலிமையைக்கொண்ட, தோள் - தோள்களையுடைய, அங்கர் கோன் முதலிய - அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன் முதலான, தேர் ம(ன்)னர்- இரதாதிபதிகளான அரசர்கள், அடங்க - எல்லோரும், வந்து - (எதிர்த்து) வந்து, அபிமன் ஆம் ஒருவனோடு - அபிமந்யுவாகிய ஒருத்தனுடனே, அமர் செய்தார் - போர் செய்தார்கள் சயத்திரதனுக்கும் அபிமந்யுவுக்கும் விளைந்த மகாயுத்தத்தில் தேருஞ் சிலையும் அழிப்புண்ட அபிமன், கதாபாணியாய்ப் பாய்ந்து புடைத்துச் சயத்திரனை முடிபிடித்து இழுத்துத் தேரினின்று கீழ்விழத் தள்ளினா னென்று பாரதவெண்பாவிற் கூறியுள்ளது. மடங்கலை வளைவதோர் சிலம்பி நூல்வலை - இல்பொருளு வமை; |