மருச்சுதன்வளைத்ததொர்தனுவினாற்சிலவடிக்கணைதொடுத்தலு மிரவுலாத்தரி. துருத்தனும்வளைத்தனனெடியகாற்சிலைதொடுத்தனனிலக்கறு தொடைகள் வாய்க்கவே. |
(இ-ள்.) அருக்கனை மறைத்தவர்- சூரியனைமறைத்தருளியவரான கண்ணபிரான், கடவு-செலுத்துகிற, தேர்த்தலை - தேரிலேயுள்ள, அருச்சுனன் முதல்- அருச்சுனன்முதலான, பல துணைவர் - பலதம்பிமார்களும,் சாத்தகி- சாத்தகியும்,செருக்கு உடைய மைத்துனர்-போர்க்களிப்பையுடைய (திட்டத்துய்மன்முதலிய தமது) மைத்துனன்மார்களும், குமரர்-(தமது) புத்திரரானஉபபாண்டவர்கடோற்கசன்முதலியோரும், காத்திடு-பாதுகாத்து வருகிற, செருகளம்-போர்க்களத்தை, வெருகொள-அச்சங்கொள்ளும்படி, வளையும் மாத்திரை-(அலாயுதனும்பல அரக்கர்களும்)சூழ்ந்தவளவிலே,-மருத்சுதன்- வாயுகுமாரனான வீமன், வளைத்தது ஒர்தனுவினால்-வணக்கின (தனது) ஒருவில்லினால், சில வடிகணை தொடுத்தலும்-கூரியசிலஅம்புகளைத் தொடுத்தவுடனே, இரவு உலா திரி துருத்தன்உம்-இராத்திரியில்உல்லாசமாகத் திரிகிற வஞ்சகனான அலாயுதனும், நெடிய சிலை கால் வளைத்தனன்-நீண்ட விற்கழுந்தை வளைத்து, இலக்கு அறு தொடைகள் - எண்ணிக்கையில்லாத அம்புகளை, வாய்க்க தொடுத்தனன் - பொருந்தப் பிரயோகித்தான்; துணைவர்-தம்பியர்மூவர் - தூர்த்த னென்ற வடசொல் விகாரப்பட்டது வாய்க்க-பலிக்க எதிரிகள் மேற்சென்றுதைத்துத் தவறாது பயன்பட என்க. (594) 198.- பின்பு வீமன் அலாயுதனது தேர்முதலியவற்றை யழித்தல். மருச்சுதன்வடிக்கணையமரர்மாற்றலன்வடிக்கணைதடுத்தும் வல்லிரதமாற்றியும் விருப்புடன்விரித்தணிதுவசம்வீழ்த்தியும்விறற்பரிகளைத்துணி துணிகளாக்கியு முரத்தொடுசெலுத்தியவலவன்மாத்தலையுருட்டியுமணிச் சிலையொடியநூக்கியு மிருட்டொளியுடற்பலதுளைகளாக்கியுமிமைப்பொழுதினிற்றிறன் மடியமாய்த்தவே. |
(இ-ள்.) மருத் சுதன் வடி கணை-வீமசேனனது கூரிய அம்புகள்,-அமரர் மாற்றலன் வடி கணை தடுத்துஉம் - தேவர்கட்குப்பகைவனான அவ்வரக்கனது கூரிய அம்புகளைத் தடுத்தும், வல்இரதம் மாற்றிஉம்-(அவன் ஏறியிருந்த) வலிய தேரை யொழித்தும், விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்திஉம் - (அவன்) விருப்பத்தோடு விரித்துக்கட்டிய கொடியை அறுத்துத் தள்ளியும் விறல் பரிகளை துணிதுணிகள் ஆக்கிஉம்-வலிமையையுடைய குதிரைகளை வெட்டிப் பல துண்டுகளாகச்செய்தும், உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டிஉம்- வலிமையோடு தேர் செலுத்தி வந்த சாரதியின் பெரிய தலையைப் புரளச்செய்தும், மணிசிலை ஒடிய தூக்கிஉம் - உறுதியான வில்லை ஒடிபடும்படி துணித்துத் தள்ளியும்,இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கிஉம்-இருட்டுப்போன்ற கரியஒளியையுடைய உடம்பைப் பலதுளைகளாகச்செய்தும், இமைபொழுதினில் - ஒருமாத்திரைப் பொழு |