பக்கம் எண் :

56பாரதம்துரோண பருவம்

     நல்வினைதீவினைகளின் தன்மையும் அவற்றின்பயனையும் சிறிதாயினும்
அறிந்திருப்பின் பாண்டவர்க்கு அரசுகொடாமை முதலிய அநீதிகளைப்
புரியானென்பார்,' அதிட்டமொன்று முணர்கலான்' என்றார். வதிட்டன்-வஸிஷ்டன்
என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு-(பஞ்சஇந்திரியங்களை) நன்றாக
வசப்படுத்தினவன் என்று காரணப்பொருள்: ஞானத்திற் குடிகொண்டவ னென்றுங்
கூறுவர். இவன்- பிரமனது புத்திரன்: வைதிக லௌகிக ஒழுங்கங்களில்
மிகச்சிறந்தவன். சூரியகுலத்தரசர்க்குப் புரோகிதனும் பிரதானமந்திரியுமான
இவன்போலவே, துரோணனும்கௌரவர்க்குக் குருவும் சிறந்தமந்திரியும் ஆனதால்,'
வதிட்டனுந்துதிக்கும்வாய்மை வரிசிலைக்கைம்முனிவன்' என்றார். உம் -
உயர்வுசிறப்பு. பதிட்டிதம்- ப்ரதிஷ்டிதம் என்னும் வடசொல் சிதைந்தது; இதற்கு-
நிலைநிறுத்தப்பட்டது என்று பொருள். தெளிவுபற்றி, 'பதிட்டிதம் பிறந்தது' என
இறந்தகாலத்தாற் கூறப்பட்டது; காலவழுவமைதி. அதிட்டம் - அத்ருஷ்டம்:
இதற்கு-கண்ணாற் காணப்படாத தென்று அவயவப்பொருள்.         (84)

40.விட்டவிட்டரதசதுரங்கவேழவாகனத்தொடுந்
தொட்டதொட்டசிலையொடுந்துணிந்துவெங்களத்திடைப்
பட்டபட்டநிருபர்தங்கள்பாடுகாணவெண்ணியோ
முட்டமுட்டவேகுகென்றுதன்படைக்குமுந்தினான்

     (இ-ள்.) விட்ட விட்ட - மேன்மேற்செலுத்தின, ரதம் - தேர்களும் துரங்கம்-
குதிரைகளும், வேழம் - யானைகளுமாகிய, வாகனத்தொடுஉம்- வாகனங்களுடனும்,
தொட்டதொட்ட- மிகுதியாக(க்கையில்) ஏந்திய, சிலையொடுஉம் - வில்லுடனும்,
துணிந்து- துண்டு பட்டு, வெம் களத்திடை - கொடிய போர்க்களத்தில், பட்ட பட்ட
- மிகுதியாக இறந்த, நிருபர்தங்கள்- (தன்பக்கத்து) அரசர்களது, பாடு- நிலைமையை,
காண - பார்க்க, எண்ணிஓ - நினைத்தோ, (துரியோதனன்), முட்ட முட்ட ஏகுக
என்று - மிகநெருங்கச் செல்லுங்களென்று (தன்சேனையரசரை நோக்கிச்)
சொல்லிக்கொண்டு, தன் படைக்கு முந்தினான் - தனது சேனைக்கு முற்பட்டு
வந்தான்;

     துரியோதனன் வந்ததது, மேல் போரிற் பகைவரை வெல்லுதலாக
முடியாமையால், அதனை, போர்க்களத்தில் அழிந்த அரசர்கள் பட்டபாட்டைப்
பார்க்கக்கருதியோ வந்தானென்று சமத்காரமாக உத்பிரேட்சித்தார்.     (85)

41.-இரண்டுகவிகள்-அபிமன் தானொருவனாக எண்ணில்லாத
சேனைகளையழித்தல் கூறும்.

முந்தவந்தமன்னனுமுரண்கொள்வாகையரசரும்
வந்தவந்தசேனையும்வகுத்தணிந்துமுனையவே
யந்தவந்தமுனைகடோறுமந்தவந்தவீரர்மெய்
சிந்தவந்துடற்றினன்சிலைத்தடக்கையபிமனே.