தீவினையால் நரகத்தும் விலங்கினும் துன்புற்றதை, ‘பின்னாள்
இடர்செய்த முறைமை ‘என்றான். கோழிப் பிறப்பில் கேட்டதிருவறத்தாலெய்திய நன்மை
முதலியவற்றைக் குறித்து, ‘இறைவன தறத்தது பெருமை‘ என்றான்.
(92)
312. |
[தோறும் |
|
செய்த வெந்தியக் கொலையொரு
துகள்தனில் சென்றுறு பவந் |
|
எய்து மாயிடிற் றீர்ந்திடாக்
கொலையிஃ திருநில முடிவேந்தே |
|
மையல் கொண்டிவண்மன்னுயிரெனைப்பலவதைசெயவருபாவ |
|
தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந்
திரங்குகின் [த் |
|
[றனமென்றான் |
(இ-ள்.) இருநில
முடிவேந்தே - பெரிய பூமிக்குத் தலைவ, செய்த வெம் தியக் கொலை - மாவினாற் செய்த
விருப்பமுள்ள கோழியின் கொலையாகிய, ஒரு துகள் தனில் - ஒருசிறிய தீவினையினால்,
சென்று உறும் பவம் தோறும் - தாம் சென்றடையும் ஒவ்வொரு பிறவியிலும், வெந்துயர் எய்துமாயிடில்
- கொடுந் துன்பம் எய்துமாயின், இஃது தீர்ந்திடாக் கொலை - விலங்கினங்களோடு
மனிதரைப் பலியிடும் இக்கொலை தீராத துயரந் தருங் கொலையாகும்: (ஆதலின்), இவண்
- இவ்விடத்தே, மையல் கொண்டு -(மோஹனீயத்தால்) அறிவு மயங்கப்பெற்று, மன்னுயிர்
எனைப்பல - பல்வேறு உயிர்களை, வதைசெய வரும் பாவத்து - பலியிடுவதனால் (வதைப்பதனால்)
வரும் பாவ வினையினால், எய்தும் ---, வெம்துயர் - கொடுந்துன்பம், எப்படித்து என்று
- எத்தன்மையதாகும் என்று, உளைந்து - மனம் வருந்தி, இரங்குகின்றனம் - (அதற்காகவே
யாங்கள் வருந்துகின்றோம், என்றான் - என்று அபயருசி மொழிந்தான்.
மாக்கோழியின் பலியே இத்துணைத் துயர் விளைக்கு மெனின்,
எண்ணிலா உயிர்களைப் பலியிடும் நுமக்கு எத்துணைத்துயர் விளையுமோ என்று இரங்குகின்றோம்
என்றானென்க.
‘வெந்துயர்‘ என்பது இரண்டிடத்தும் கூட்டபட்டது. வெம்(மை) -
(தெய்வ) விருப்பம். ‘தியக்‘ - திர்யக் என்பதன் திரிபு
|