| இதுவுமது | | 1844. | தன்னையோ ரரச னாக்கித் தரங்கநீர் வளாக மாள்வித் தின்னுயி 1ராகச் செல்லு நல்வினை யென்னு மின்ன முன்னுப காதி தன்னை முதல்கெட முயலுங் கீழ்மை நன்னரின் 2மன்ன னன்றே நரகங்கட் கரச 3னாவான். | (இ - ள்.) தன்னை ஓர் அரசன் ஆக்கி - தன்னை ஒப்பற்ற மன்னனாகப் பிறப்பித்து, தரங்கம் நீர் வளாகம் ஆள்வித்து அலைகடலாற் சூழப்பட்ட உலகத்தை ஆளும்படி செய்து, இன்னுயிராகச் செல்லும் - இனிய உயிர்போன்று நிகழ்கின்ற, நல்வினை என்னும் - நல்வினையென்று கூறப்படுகின்ற, இன்னமுன் உபகாரிதன்னை - முன்னர் இத்தகைய உதவிசெய்த தொன்றனை, முதல்கெட - வேரொடு அழிந்துபோமாறு, முயலும் - முரண்நெறியிலே முயலுகின்ற, கீழ்மை - சிறுமையுடைய, நன்னர்இல் - நன்றி தேர்தல் இல்லாத, மன்னன் அன்றே - அரசன் அல்லனோ, நரகங்கட்கு அரசன் ஆவான் - நரகத்தை ஆளுதற்குரிய அரசனாகத் தக்கவன், (எ - று.) நல்வினையின் பெருமையை மறந்து தீவினைக்கட் செல்லும் அரசர் முதலியோரைக் கருதி இரங்கியவாறு. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்குÓ (குறள் - 110) என்பவாகலின், தனக்கு நன்மையே செய்த நல்வினையைப் புறக்கணித்துத் தீவினையே கன்றித்திரிதரும் வேந்தர் அண்ணாத்தல் செய்யா அளறு புகுவர் என்பான், “நரகங்கட்கு அரசராவார்Ó என்றான். அரசராதல் அந்நரகத் துன்பம் முழுதும் உரிமையுடன் நுகர்தல என்க. | | (714) | | |
|
|