| குறிஞ்சி | | 21. | நீல வால 1வட்டத்தி னிறங்கொளக் கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல் ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும் ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம். | (இ - ள்.) ஒர்பால் எலாம் - அந்நாட்டின் குறிஞ்சி நிலத்து இடங்களி லெல்லாம்; நீல ஆலவட்டத்தின் நிறம் கொளக் கோலும் பீலிய - நீல நிறத்தையுடைய ஆலவட்டத்தின் நிறமுண்டாக விரிக்கும் பீலியினையுடையவாய்; கோடுஉயர் குன்றின்மேல் - உயர்ந்த உச்சியினையுடைய குன்றின்மேல்; ஆலும் மாமழை நீள்முகில் ஆர்த்தொறும் - ஒலிக்கின்ற மிகுதியான மழைப் பெருக்கினையுடைய நீண்ட முகில்கள் முழங்குந்தோறும்; ஆலும் மாமயில் - ஆடுதலையுடைய அழகிய மயில்கள்; ஆலும் - கூத்தாடா நிற்கும். (எ - று.) மாலும் மாமயில் எனப்பிரித்து; மனக்களிப்படையும் அழகிய மயில்கள் என்றுரைப்பினும் பொருந்தும். குறிஞ்சி நிலத்தின் கண் முகில்களின் முழக்கத்தைக் கேட்கும்போதெல்லாம் மயில்களாடும் என்று குறிஞ்சி நிலத்தின் சிறப்பைக் கூறினார். குறிஞ்சிக்குப் பறவைகள் மயிலும் கிளியும். ஆலவட்டம் | | ( 21 ) | |
|
|