|
விளங்கி
வெல்கவே - விளக்கமும் வெற்றியும் பொருந்துவதாக என்க.
விளக்கம் பெறுதல் உலகத்தாராற் போற்றப் பெறுதல்; வெற்றி
பெறுதல் -
மேலோங்கி நிற்றல். “வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க”முதலாகத்
திருவாசகத்திலே இறைவனது திருவடிகள் வெல்க - வெல்க என்று
பன்முறையும் வாழ்த்திப் போற்றியது காண்க. 4
வேறு
| 4.
|
அளவி
லாத பெருமைய ராகிய
|
|
| |
அளவி
லாவடி யார்புகழ் கூறுகேன்
அளவு கூட வுரைப்பரி தாயினும்
அளவில் ஆசை துரப்ப வறைகுவேன். |
5 |
இது முதல் மூன்று திருப்பாட்டுக்கள் அவையடக்கம்
அவையைத் தன்னுள்ளே அடக்குதல். தன்னைத் தாழ்த்தலால்
அவை
அடங்கு மென்பது.“வலிதன்றே தாழுந் துலைக்கு” என்ற கருத்தும் காண்க.
(இ-ள்.)
அளவு..........கூறுகேன் - அளவற்ற பெருமைகளை
யுடையார்களாகிய அளவில்லாத அடியார்களது புகழ்களை எவ்வாறு எடுத்துச்
சொல்ல வல்லேன்; அளவுகூட உரைப்பு அரிது - அவற்றை அளவு கூடும்படி
சொல்லுதல் அரிது; ஆயினும் - இருந்தபோதிலும்; அளவு இல் ஆசை
துரப்பஅறைகுவேன் - (என் மாட்டாமையை அறிந்து தடுத்தேனாயினும்
தடுக்க ஒண்ணாதபடி) அளவற்ற ஆசை (என்னைச் சொல்வாயாக என்று)
துரப்பதனாலே சொல்லத் துணிகின்றேன்.
(வி-ரை.)
அளவிலாத பெருமை - மேற்பாட்டிலே “தெரிவரும்
பெருமை”, “பொருவருஞ் சீர்” என்று விதந்து பேசப்பட்டது.
இப்பெருமைகளின் விரிவைப் பின்னர்த் ‘திருக்கூட்டச் சிறப்பு’ என்ற
பகுதியிற்
காண்க. பெருமை - செயற்கரும் செய்கை செய்வது.
அளவிலாசை
- பேராசை. வருகின்ற பாட்டிற் பெருநசை என்பது
காண்க. தனது தகுதிக்கு மீறிய செய்வேன் என்று எழும் ஆசை.
துரப்ப
- தூண்ட. தூண்டுதலினால் சொல்லப் புகுந்தேன்.
அளவு கூட
- அளவு கூடும்படியாக; அளவிட்டு - அளவுபடுத்தி
என்பது. 5
| 6.
|
தெரிவ
ரும்பெரு மைத்திருத் தொண்டர்தம்
|
|
| |
பொருவ
ருஞ்சீர் புகலலுற் றேன்முற்றப்
பெருகு தண்கட லூற்றுண் பெருநசை
ஒருசு ணங்கனை ஒக்குந் தகைமையேன். |
6 |
(இ-ள்.)
முற்றப் பெருகு.......உண் - பெருத்த அமிர்தமாகிய
பாற்கடலை உற்றுக்காண உண்ணவேண்டும் என்கின்ற;
பெருநசை......தகைமையேன் - பேராசை கொண்டதொரு
நாயினைப்
போல்கின்ற தன்மை யுடையேன் யான்; ஆதலின், தெரிவு அரும்பெருமைத்
திருத்தொண்டர்தம் - அறிதற்கரிய பெருமை
வாய்ந்த
திருத்தொண்டர்களுடைய; பொருவருஞ்சீர் புகலலுற்றேன்
-ஒப்பற்ற சீர்களை
எடுத்துச் சொல்ல முற்படுகின்றேன்.
(வி-ரை.)
முற்றப் பெருகு - இதற்குமேற் பெரிதில்லை என
சவால்
மிகவும் பெருகிய.
|