பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு127

Periya Puranam

சூழ“ என்றுரைத்தார். குங்குமங் குலவு தோளானை அடுத்துச் சூழ்ந்தார்
மன்னிளங்குமரர் என்பார் அவர்களை முன்னேயும், அவ்விரு திறத்தாரையும்
சூழ்ந்தன சேனை என்பார் தானைகளைப் பின்னேயும் கூறினார் என்க.
இவர்களுக்கிடையே அரசகுமாரன் விளங்குவதைப் பாட்டுப் போக்கிலும்
இவ்வாறு வைத்துக் கூறியது காண்க.

     பொங்கிய தானை
- சேனையின் மகிழ்ச்சிமிக்க ஆரவாரத்தைப்
பொங்கிய என்றார்.

     தோளான் - தோளானாகி. தேர்மிசை - மாடவீதியில்
அரசிளங்குமரன் உலாப் போந்தான் ஆதலின் தேர்மிசைப் போந்தான்
என்றார்.

     மாடவீதி என்றும், இளங்குமரரும் தானையும் சூழ என்றும், தேர்மிசை
என்றும், கூறிய பொருள்களின் உட்கிடையைப் பின்னர் “வளவ
நின்புதல்வன்“ எனும் 116-ம் திருப்பாட்டின் கீழ்க் காண்க.

     மைந்தன் - சூழ - சூழ - தோளான் (ஆகித்) தேர்மிசை - மாடவீதி -
போந்தான் என்க.

மாலை தாழ்ந்த - என்பதும் பாடம். 20

106. பரசுவந் தியர்முன் சூதர் மாகத ரொருபாற்
                                  பாங்கர்
 
  விரைநறுங் குழலார் சிந்தும் வெள்வளை
                         யொருபான் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி
                        யொருபால் வென்றி
அரசிளங் குமரன் போது மணிமணி மாட வீதி.
21

     (இ-ள்.) பரசு...முழங்கொலி ஒருபால் - தனது புகழ் பரவிக்கொண்டு
வரும் வந்தியர்கள் முன்னும், சூதர்கள், மாகதர்கள் (ஆகிய இவர்கள்)
ஒருபக்கமுமாக வரவும், தாம் அணிந்த வெள்வளைகளைச் சிந்தும் பெண்கள்
ஒருபக்கம் வரவும்; முழங்கி ஒலிக்குமாறு முரசும் சங்கமும் ஒலிப்பவர்
ஒருபக்கம் வரவும்; வென்றி. வீதி - வெற்றி பொருந்திய அரசனது
இளங்குமரன் அழகிய மணிமாடவீதியில் உலாப் போகின்றான்.

     (வி-ரை.) பரசுதல் - புகழ்களைப் பாடிவருதல். இதனைச் சூதர்
மாகதர்களோடும் தனித்தனி கூட்டுக. வந்தியர் - மங்கலப் பாட்டுக்களினால்
வந்திப் போர் - பாணர் - என்பர். வந்தித்தலாலே வந்தியர் என்பர். சூதர் -
அவ்வப்போது செய்யும் செயல்களைப் பற்றிக் கட்டியங்கூறுவோரும்,
அரசனைத், தொன்றுதொட்டுத் துயிலெழுப்புங் காலத்தும் பிற சமயங்களினும்
பாடுவோரும். இவர்கள் நின்றேத்துவோர். மாகதர் - அரசனது வீரச்
செயல்களைப் புகழ்ந்து பாடுவோர் இவர்கள் இருந்தேத்துவோர்.

     வெள்வளை சிந்துங் குழலார் என்று கூட்டிப் பொருளுரைக்க. குழலார்
வெள்வளை சிந்துதல்
- இவ்வரசர் போன்ற நாயகனை நாம் அடைவோமோ
என்று மனம் வருந்த, அதனால் மேனி இளைத்தல். “கண் களங்கஞ் செய்யக்
கைவளை சோர...“ பொன்வண்ணத்தந்தாதி 3-வது பாட்டு. “ஏர்பரந்தவின
வெள்வளை சோரவென் னுள்ளங் கவர் கள்வன்“ (திருஞா - நட்டபாடை
- பிரம புரம் - 3). உத்தம நாயகன் உலாவருங் காலத்து இவ்வாறு மகளிர்க்கு
நிகழும் மெய்ப்பாடு கூறுதல் இலக்கிய வழக்காதலின் இஃது இங்குக்
கூறப்பட்டது என்க. “...நெறிபல வார்குழலார் மெலிவுற்ற நெடுந்தெருவிற்,
செறிபல வெள்வளை போயின தாயர்கள்தேடுவரே“ (பதினொ - திருமுறை -
பட்டினத்தடிகள் - திருவேகம்ப - திருவந்தாதி - 53.) வெள்வளை -
சங்குகளினாற் செய்த வளைகள். “சங்கமரும் முன்கைத் தடமுலையார்
மேலெய்வான்“ என்ற ஞானவுலாவுங் காண்க. குழலார் - நாடகப்
பெண்களென்று கூறுவாரு முளர்.

     ஆர்ப்ப முழங்கு ஒலி - ஆர்த்ததனால் எழுந்த ஒலித்தொகுதி.
ஒலிப்பவர் - வருவிக்கப்பட்டது. வென்றி - அரசனுடைய வெற்றி. “கொற்ற
ஆழி குவலயம்