Periya Puranam
“துடிகொணே
ரிடையாள் சுரிகுழன் மடந்தை
துணைமுலைக் கண்கடோய் சுவடு
பொடிகொள்வான் றழலிற் புள்ளிபோ லிரண்டு
பொங்கொளி தங்குமார் பினனே....“ - அருட்பத்து -
5. |
எனவரும் திருவாசகங்களும்
காண்க. 34
| 45.
|
நங்க
ணாதனா நந்தி தவஞ்செய்து |
|
| |
பொங்கு
நீடரு ளெய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனன்மலர்
செங்கை யாளரை யாறுந் திகழ்வது. |
35 |
(இ-ள்.)
நங்கள்..........பொற்பது - நமது குருநாதனாகிய நந்திதேவர்
தவம் செய்து வளர்ந்து நீடிய அருள் பெற்ற பொற்பையுடையதாகிய; கங்கை
வேணி........திகழ்வது - கங்கையாறு சடையிலே மலரவும், சிவந்த கையிலே
கனல் மலரவும் கொண்ட இறைவருடைய திருவையாறு என்ற தலமும்
இத்தென்றிசையிலே விளங்குவதாம்.
(வி-ரை.)
நங்கள் நாதனாம் நந்தி - சிவபெருமானிடத்தில்
நேரே
ஞானோபதேசம் பெற்ற திருநந்திதேவர் அதைச் சனற்குமாரர் முதலிய
மாமுனிவர்களுக்குக் குருபரம்பரையிலே உபதேசித்தருளினார். இவர்கள்
திருக்கயிலாயத்தே உள்ளவர்கள். இந்த மரபிலிருந்து பூவுலகிலே உபதேசம்
பெற்றவர் சைவ சந்தான ஆசாரியர்களின் முதல்வராகிய மெய்கண்ட
சுவாமிகள். ஆதலின் நமது உண்மைத் தெய்வச் சைவக் குரு மரபிற்குத்
திருநந்திதேவரே முதற்குரு ஆவர். கயிலையிலே தவஞ்செய்து நிற்கும்
முனிவர் கூட்டத்துக்குத் தலைவராகி இச்சரிதம் சொல்லும் உபமன்னிய
முனிவர், அக்கயிலையிலே சிவகணங்களுக்கெல்லாம் தலைமையாம்
பணிபெற்ற கோயில்நாயகனாகிய நந்திபெருமானை நங்கள் நாதனாம் என்று
குறிப்பதும் பொருந்துவதே. “நங்குரு மரபுக் கெல்லா முதற்குரு நாதனாகி”
என்ற காஞ்சிப் புராணமும் காண்க.
தவஞ்செய்து பொங்குநீடருள்
எய்திய பொற்பது - இச்சரிதம்
காந்தம் - வாயு சங்கிதை - சிவமகாபுராணம் முதலியவற்றுட் காண்க.
இத்தலத்தே சிலாத முனிவர் (சிலா + அதர் - கல்லைத் தின்று தீர்ப்பவர்)
வரங் கேட்டபடி மதலையாக மக்கள் வயிற்றுட் படாமலே நந்திதேவர்
அவதரித்து, மகா உருத்திரத்தை 8 கோடி உருச் செபித்துப் பூசித்துச், சூயசை
என்ற தேவியை மணம் செய்யப் பெற்றதுடன், சாரூபம் - கணநாயகம்
முதலிய மெய்ப் பேறுகளையும் பெற்றுத், துவிதியசம்பு என்று பேரும்பெற்று
விளங்குகின்றனர். முனிவர் தேவர்கள் பஞ்சாக்கர செபம் செய்து
பேறுபெற்றதால் இது செப்யேசம் என்ற காரணப் பேரும் பெற்றது.
அத்தவத்திற் கிடமாய் இப்போதும் மேலைப் பிராகாரத்திலே 7 வில்லமரங்க
ளிருப்பதும், அவற்றைக் கடந்து போகக்கூடாதென்பதும், சத்த மின்றி
மவுனமாய்ப் போவதும் ஆகிய வழக்கம் நிகழ்வதாம். ஆதலின் மேலும்
மேலும் பொங்கி - பெருகி - என்றும் நீடியிருக்கும் அருட்பேறு என்பார்
பொங்கு - நீடு - அருள் என்றார். பொற்பது - ஐயாறு - என்று
கூட்டிப்பொற்பினை - அழகை - உடையதாகிய ஐயாறு என விரிக்க.
ஐயாறு -
ஐந்து ஆறுகள். வடமொழியில் பஞ்சாதம் என்பர்.
சுவாமிபாத கங்கை - தேவிகங்கை - இடபங்கை - காவிரி - இவற்றுடன்
நந்திதேவர் உவகை ஒரு நதியாக உருவெடுத்துச் சேர்வதால் ஐந்தாறுகள்
சேர்வது.
கங்கைவேணி மலரக் கனன்மலர்
செங்கையாளர் - கங்கை
சடையிலே மலரவும் கனல் கையிலே மலரவும் வைத்த முதல்வர் என்க.
மலர்தல் - விரிந்து விளங்குதல். நீரும் தீயும்
ஒன்றற்கொன்று
விரோதமுள்ளன. நீர் பெருகில் தீ அவிதலும், தீப் பெருகில் நீர் சுருங்கலும்
ஆம். இவ்விரண்டையும் ஒருங்கே
|
|
|
|