பக்கம் எண் :


எறிபத்தநாயனார்புராணம்697

 

மூன்றாவது

இலைமலிந்த சருக்கம்

திருச்சிற்றம்பலம்

இலைமலிந்த வேனம்பி யெறிபத்தர்க் கடியேன்;
     ஏனாதி நாதன்ற னடியார்க்கு மடியேன்;
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்;
     கடவூரிற் கலையன்ற னடியார்க்கு மடியேன்;
மலைமலிந்த தோள்வள்ளன் மானக்கஞ் சாற
     னெஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியேன்;
அலைமலிந்த புனன்மங்கை யானாயர்க் கடியேன்;
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே.

திருத்தொண்டத்தொகை - (2)