(வி-ரை.)
வென்றி மடங்கல் - மிருகங்கட்கு அரசாகி,
எதிர்த்து
எதுவரினும் வெற்றியே பெரும் சிங்கம். எஞ்ஞான்றும் அரியேறு போல
வெற்றியே பெற்ற நாயனாரது நிலை குறித்தது. முன்னர் வெம்புலியேறு
(635)
என்றனர். இங்கு வென்றி மடங்கல் என்றது இவ்விடமே புலியேற்றினும் மிக்க
உயர்வாகிய இவரது பேருயர்ச்சி வெளிப்படும் இடம் இதுவென்பதும்,
எவ்விடத்திலும் இழிதகைமையிற் சொல்லாத மடங்கல் போல இங்கும்
நாயனார் பெறுவது வெற்றியே என்பதும் குறிப்பு.
விடக்கு
- உணவாகிய மாமிசம். அதனையுடைய பிராணிக்கு வந்தது.
ஆகுபெயர். "விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென" (பண் -
இந்தனம் - திருவிராகம் - திருப்புறம்பயம் - 10) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரமும், "வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப" என்ற
திருவாசகமும் காண்க. தன்னையும் ஒரு வீரனென்று எண்ணிக்கொண்டு
போருக்கென வந்த அதிசூரனை வெறும் மாமிசபிண்டத்துக்கு ஒப்பாக்கிக்
கூறினார். 617-ல் உரைத்தவை காண்க. மடங்கலின் முன்வரும் ஒரு
விடக்கினுக்கு ஒரு பாய்ச்சலில் ஓரரையிற் பற்றுண்டு கொல்லப்படுதலன்றி
மற்று எதிர்ச்செயல் வேறில்லையாதல்போல் அவனுக்கும் வேறு செயலில்லை
என்பதை அவர் நின்றநிலையினாற் குறித்தார்.
நிலை
கண்டு - தன்னால் வேறொன்றுமியலாமை கண்டு அதனால்
வஞ்சனை முற்றும் வகை குறித்து.
கிடைத்தல்
- கிட்டுதல் - நெருங்குதல். "கிடைத்தனர்" (572).
பலகையான்
தன் நெற்றி மறைத்து எனக் கூட்டுக. மறைத்து
-
கரவாடும் வன்னெஞ்சனாதலின் தன்னை மறைத்தான் என்பதும் குறிப்பு.
"நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்" "நெஞ்சிற் கரவுடையார்
தம்மைக் கரப்பர்" என்றவை காண்க.
மறம்
பூண்டான் மூண்டான் என மாற்றுக. மறம் - அறத்திற்
றிறம்புதலாகிய மறமாம். இங்கு வஞ்சித்து வெல்லுதல் குறித்தது.
பூண்டானாகிய அவன். வினையாலணையும் பெயர். மூண்டான்
- போர்
செய்வான்போல் தோன்றினான். "மூளாத்தீப் போல்" என்ற நம்பிகள்
தேவாரங் காண்க.
பலகையால்
மறைத்தல் போரில் வீரர் செய்யும் தற்காப்புச் செயல்.
இதனையே தன் வஞ்சச் செயலை மறைக்குமாறு அவன் மேற்கொண்டது
ஐந்தாவது வஞ்சனைச் செய்கை என்க. அதனாலும்
மறம் பூண்டான் என
வற்புறுத்தியவாறு.
நின்றார்
நிலை - என்பதும் பாடம். 36
644.
|
அடல்விடையே
றென்ன வடர்த்தவனைக் கொல்லு
மிடைதெரிந்து தாள்பெயர்க்கு மேனாதி நாதர்
புடைபெயர்ந்த மாற்றான் பலகை புறம்போக்கக்
கடையவன்ற னெற்றியின் வெண்ணீறு தாங்கண்டார். 37
|
(இ-ள்.)
வெளிப்படை. வல்லமை பொருந்திய விடையேறுபோல
எதிர்த்து அவனைக் கொல்லத்தக்க சமயத்தைத் தெரிந்து கால்பெயர்த்துச்
செல்கின்ற போது புடை பெயர்ந்த மாற்றலன் பலகையை விலக்கவே,
கடையவனாகிய அவன் நெற்றியின்மேல் வெண்ணீற்றினைத் தாம் கண்டனர்.
(வி-ரை.)
அடல் விடை ஏறு என்ன அடர்த்து - இடப ஏறு
முட்டிப் பாய்ந்து கொல்வதுபோல எதிர்த்து. பெருமிதமும் கம்பீரமும்
வலிமையும் மிக்கது விடையேறு. முட்டிப் பாய்ந்து கொல்லுதலிற் சிறந்து
விளங்குவது. முன்னர்ப் புலியேறு, வென்றி மடங்கல் என உவமித்த
ஆசிரியர், இங்கு நாயனாரை அடல்விடை ஏற்றினுக்கு உவமித்தார். விடைஏறு
சீறிமுட்டிப் பாய்தலிற் சிறந்தது போலவே, அவ்வாறு பாயும்போது
பழகியோரைக் காணின் முட்டாது நிற்கவும்
|