திருவமுதூட்டினார். இவ்வாறு அடுத்த திருத்தொண்டு பின்னரும் பலநாள் செய்திருந்து இறைவரது திருவடி நிழற்கீழ் அடியாருடன் கலந்தனர். |
கற்பனை: 1. தொன்மரபில் தத்தமக்கு உரிய ஒழுக்கத்தில் நின்று மனையற நெறி நிற்கும் குடிகளை யுடையது நகரின் சிறப்பு. (4012) |
2. சிவன் கழற்காதலுடனே வளர்தல் முன்னைத் தவமுடையார்க்கே யாகும் (4013). |
3. சிவன் கழற்கே செய்யும் தொண்டினையே பற்றி, மற்றோர் பற்றில்லாத நிலையிற் பணிசெய்தல் வீடு தருவதாம் (4013). |
4. சிவன் அடியார்களை அழுது செய்வித்தற்கண் நூல்களில் விதித்த நெறி தவறாது மனமகிழ்ச்சியுடன் செய்தல் வேண்டும் . (4014). |
5. சிவனடியார் திருவேடங் கண்டாற் சிவனாகவே கண்டு வணங்கிப் பணி செய்தலன்றி அவரது முன்னைநிலை முதலிய செய்திகளைப் பற்றி யெண்ணலாகாது. (4018 - 4019) |
6. அவ்வாறு முன்னை நிலைபற்றி எண்ணுவது சிவாபராதம். அஃது உரியபடி தண்டித்துக் குற்ற நீக்கற்பாலது (4019). |
7. மனைவியார் செய்த சிவாபராதத்துக்காக அவர் கையினைத் தடிந்த கலிக்கம்ப நாயனார் அதுபற்றித் துளக்கமில்லாத சிந்தையுடன் திருத்தொண்டு செய்திருந்தனர். இது சிவனையன்றி மற்றோர் பற்றுமில்லாத பெரியோர் நிலை (4020). சண்டீசர் புராணமும், பிறவும் பார்க்க. |
தலவிசேடம் :- திருப்பெண்ணாகடம் - திருத்தூங்கானை மாடம் - III - பக்கம் 211 பார்க்க. |
கலிக்கம்ப நாயனார் புராணம் முற்றும். |