பக்கம் எண் :

1290(முதல் திருமுறை)


32. ஸ்ரீ குருஞானசம்பந்தர் பணி மன்றம் நிறுவி அதன் வாயிலாக மயிலாடுதுறையில் மழலையர்பள்ளி, செகண்டரிப் பள்ளி ஆகியன நடத்துவதோடு பிற ஊர்களிலும் இம்மன்றச் சார்பில் பள்ளிகள் மருத்துவ நிலையங்கள் அமைத்துச் சமூகத் தொண்டுகள் முதலியன செய்து வருவது.

* * * * *

வாழ்த்து

வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.

- பெரிய புராணம்.

வான்முகில் வழாது பெய்க

மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க

குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க

நற்றவம் வேள்வி மல்க

மேன்மைகொள் சைவ நீதி

விளங்குக உலக மெல்லாம்.

- கந்தபுராணம்.

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

- திருவிளையாடற் புராணம்.

திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி

சேரும்நின்றன்

மருவார் மரபும் திருநீறும் கண்டியும்

வாழ்கஅருட்

குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற்

கோநிரைகள்

தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த

தேசிகனே.

- ஆதீன அருள் நூல்.