பக்கம் எண் :

20(முதல் திருமுறை)



குருபாதம்
பன்னிரு திருமுறை ஆசிரியர்கள்

1திருஞான சம்பந்தர் 2வாகீசர் 3சுந்தரர்

4திருவாத வூரர்மற்றைத்

5திருமா ளிகைத்தேவர் 6 சேந்தனார் 7கருவூரர்

தெள்ளு 8பூந் துருத்தி நம்பி

வருஞான 9கண்டரா தித்தர் 10வே ணாட்டடிகள்

வாய்ந்த 11திரு வாலி யமுதர்

மருவு12புரு டோத்தமர் 13சேதிராயர் 14மூலர்

மன்னு திரு 15ஆல வாயார்

ஒரு 16காரைக் காலம்மை 17ஐயடிகள் 18சேரமான்

ஒளிர் 19கீரர் 20கல்லாடனார்

ஒண் 21கபிலர் 22பரணர்மெய் உண 23ரிளம்பெருமானொடு

ஓங்கும் 24அதி ராவடிகளார்

திருமேவு 25பட்டினத் தடிகளொடு

26நம்பியாண்டார் நம்பி 27சேக்கிழாரும்

சிவநெறித் திருமுறைகள் பன்னிரண் டருள்செய்த

தெய்விகத் தன்மையோரே.

- புலவர். திரு. வை.தருமலிங்கம் பிள்ளை.
தமிழாசிரியர், தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை,
தருமபுரம்.